நான் நினைத்த மாதிரியே, வெகு நாட்கள் எழுதமுடியாமல் போய்விட்டது. வாசகர்கள் பொறுத்துகிட்டதுக்கு நன்றி! :)
"காதல் ஒரு தேவையில்லாத எமோஷன் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கைகளில் ஒன்று."- சுஜாதா.
அண்மையில், சுஜாதா ஆ.வி யில் காதலைப் பற்றி எழுதிய மற்றுமொரு கட்டுரை படித்தேன். மனிதர், காதலை அக்குஅக்காக பிரித்து எடுத்து, 'அது வெறும் இயற்கையின் தூண்டுதலுக்கு கொடுக்கப்பட்ட நாகரீகப் பெயர்' என்ற ரேஞ்சுக்கு எழுதியிருந்தார்! விஞ்ஞான பூர்வமாக உண்மைதான். ஆனால், அப்படி பார்த்தால் மனித உடலென்பதே வெறும் ரசாயனங்களின் விளையாட்டு. மனித மனது என்று ஒரு வஸ்து கிடையவே கிடையாது. அது பல ந்யூரான்களின் இணைப்பால் விளையும் மின்சக்தி பிரவாகம். ஒவ்வொரு விதமாக அந்த பிரவாகம், நியூரான்கள் வழி சென்றால் (Neuronal pathways), ஒவ்வொரு விதமான எண்ணம்/உணர்ச்சி மனதினில் உருவாகிறது. இப்படியெல்லாம் யோசித்தால், அப்புறம் எல்லாமே மாயை என்கிற ரீதியில் தோன்றிவிடும். 'எல்லாம் மாயை' என்பது உயர்ந்த சித்தாந்தம். அதை மனதின் ஒரு மூலை உணர்ந்தாலும், அதை முழுமையாக ஏற்றுக் கொள்ள மனப்பக்குவம் வேண்டும். அதனால், என் சிறு மூளைக்கு எட்டியவரை 'காதல்' என்று ஒன்று இருக்கிறது என்றே வைத்து கொள்கிறேன்..:)
ஆனால் எதை 'காதல்' எனக் குறிப்பிடுகிறோம்? ஆங்கிலத்தில் எல்லாவற்றையுமே பொதுப்படையாக 'love' என்று தான் கூறுவார்கள். நடைமுறைத் தமிழில் அப்படியல்ல. இருபாலருக்கிடையே ஏற்படும் romantic love மற்றுமே இப்போது 'காதல்' என அழைக்கின்றனர். ஆனால், காதலோ பல வகைப்பட்டது. நம் தாய் தந்தையரிடம் வைக்கும் பாசம், கால்நடை பிராணிகளை பார்த்து ஏற்படும் பரிவு, வீட்டில் பூனை நாய்களிடம் காட்டும் பிரியம், நண்பர்களிடம் பாசம், யாரோ ஒரு வழிப்போக்கரிடம் ஏற்படும் பச்சாதாபம் எல்லாமே காதலின் பரிணாமங்கள் தான்!
"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பதுவும்
வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாவதும்
நாதன் நாமம் நமச்சிவாயவே!"
என்று அப்பர் பெருமான் தேவாரத்தில் பாடியதும் காதல் தான்! ஆனால் அதை கொச்சையாகப் பார்க்க தோன்றுகிறதா? நான் என்ன சொல்ல வரேன்னா, ஒரு வகையிலாவது காதலை உணராதவர்கள் உலகில் இல்லை. ஆனால் அதற்கு வேறு பெயர் சூட்டி அழைக்கலாம்.இதைத் தான் சுஜாதா கூறியிருக்கலாம்.
அதற்காக காதல் தெய்வீகமானது என்று எல்லாம் டயலாக் அடிக்க விரும்பவில்லை! என்னை பொறுத்த வரையில் காதலைப் பற்றி ரொம்ப ஓவராக ஹைப் கொடுத்து, டயலாக் அடிச்சே கெடுத்துட்டாங்க. எதிர்ப்பாலரிடம் ஈர்ப்பு ஏற்படுவது இயற்கை. வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையை நாம் கடந்து செல்ல செல்ல, அந்த ஈர்ப்பும் உருமாறும்; அன்பும் வேறு வகையாக வளரும். Growing old together is perhaps the best way to describe love. 'நான் வானத்தில் குதித்தேன். நிலவை பிடித்தேன். ஆகாசத்தில் பறந்தேன்' என்று சொல்வதெல்லாம் கவிதைக்காக. அப்படி அக்னி ஜ்வாலையாக, மனிதரை அழிக்கும் வகையிலும் காதல் பிறக்கலாம். அதற்காக, 'எனக்கு அப்படியெல்லாம் தோன்றவில்லை. அதனால் எனக்கு காதல் இல்லை' என்று நிறைய பேர் உண்மை அன்பை நிராகரித்ததையும் பார்த்திருக்கிறேன். அமைதியாக, ஆரவாரம் இல்லாமல், தீபத்தில் சுடர்விடும் அழகிய நெருப்பு முத்து போல் மிதக்கும் காதலும் ஏற்படலாமே?!?!
இந்த கதைக்கு பல பேர் தங்கள் கருத்துக்களை எழுதியிருக்கிறீர்கள். எனக்கு விதியில் நம்பிக்கை உண்டு. அன்பின் சக்தியிலும் நம்பிக்கை உண்டு. Faith moves mountains, என்று ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு. ரோசாலியின் அபிரிமிதமான நம்பிக்கைக் காரணமாக விஞ்ஞானி பிறக்கிறாரோ? கடவுளே இல்லை என்று நினைத்த விஞ்ஞானிக்கு, கடைசியில் கடவுள் முன் நிற்பதே ஒரு irony. ரோசாலியின் அன்பின் பிணைப்பு ஒரு வேளை அவரை பூமிக்கு கட்டுண்டு இழுத்திருக்கலாம்! எத்தனையோ விதத்தில் விவரிக்கலாம். உங்கள் எண்ணங்களும் சரியென்றே தோன்றுகிறது! விஞ்ஞானத்துக்கும், சாத்திரத்துக்கும் அப்பாற்பட்ட அன்பின் சக்திதான் இந்த உலகை ஆட்டுவிக்கிறது என்பதில் எனக்கு அளவுக்கடந்த நம்பிக்கை!
அண்மையில் படித்த காதல் கவிதை ஒன்று. (http://www.nilacharal.com/stage/kavithai/tamil_poem_246b.asp)
என் ப்ரியமானவனே...
மல்லிகைப்பூவின்
இதழ் போல்
மிருதுவாய்
உன் பிடிவாதம்.
அழுதபின் தோன்றும்
நிறைந்தெ அமைதியாய்
உன் மெளனம்.
பொம்மைகளுடன்
சண்டையிடும் குழந்தையாய்
உன் கோபம்.
உயிர் நனைக்கும்
அதிகாலை பனித்துளியாய்
உன் ஸ்பரிசம்.
பெண்மையின் மென்மை
உணர்ந்த உன்
ஆண்மையால்
தினம் புதிதாய் பிறக்கும்
பூவாய் நான்!
-நிலாரசிகன்
செவ்வாய், மார்ச் 21, 2006
சனி, பிப்ரவரி 11, 2006
காதல் - 1!
'காதலர் தினம்' வெகு அருகில் இருக்கிறது. அன்று பதிவு எழுத நேரம் கிடைக்கிறதோ இல்லையோ. இன்றே எழுதி விடுகிறேன்..:) காதலைப் பற்றி என்னமோ அறிவுஜீவித்தனமாக எழுதலாம் என்று நினைத்திருந்தேன். 'உனக்கு அவ்வளவு அதிகபிரசங்கித்தனமா?' என்று ஆண்டவன் வைத்தான் ஒரு ஆப்பு. காலை கையில் காபியுடன் சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' படித்துக் கொண்டிருந்தேன். அதில் மார்ட்டின் கார்ட்னரின் ஒரு குட்டி கதையை சுஜாதா மொழிப்பெயர்த்திருந்தார். எனக்கு பிடித்திருந்தது. அதை சுஜாதாவிடமிருந்து சுட்டு இதோ கீழே போட்டிருக்கிறேன் (கற்றதும் பெற்றதும்- 'ஜீனோம்'). சுஜாதா மன்னிப்பாராக! -
ஒரு பெரிய விஞ்ஞானி சாகும் தறுவாயில் இருந்தார். அவரருகே அவருடைய காதலி ரோசாலி உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு அவர் மேல் மிகுந்த காதல். விஞ்ஞானிக்கு முதல் காதல் விஞ்ஞானம் தான்.அப்புறம்தான் ரோசாலி.
"நாம் நிச்சயம் மறுபடி சந்திப்போம்....எங்கேயாவது, எப்போதாவது.." என்றாள்.
விஞ்ஞானி கஷ்டப்பட்டு இருமிக்கொண்டு சொன்னார்: "அபத்தமாக பேசாதே..உனக்கு விஞ்ஞானம் தெரியாதா..?"
ரோசாலிக்கு நிஜமாகவே விஞ்ஞானம் தெரியாது.
"ஆனால், நிச்சயம் நாம் சந்திப்போம் என்று நம்பிக்கை வைக்க மாட்டாயா..?"
விஞ்ஞானி தலையாட்டினார். "எனக்கு ஒரு வாழ்நாள் போதும்..எளிதாக,அழகாக அது முடிவடைகிறது...இல்லையேல் பிரபஞ்சம் மிகவும் சிக்கலாகிவிடும்.."
அவர் இறந்துபோனார்.
சில லட்சம் வருடங்கள் கடந்த பின் விஞ்ஞானி திடீரென்று கடவுளுக்கு முன் தான் நிற்பதை உணர்ந்தார். அவருக்கு குழப்பமாக இருந்தது.
"எனக்கு புரியவில்லை...எப்படி விஞ்ஞான விதிகள்படி நான் மறுபடி வாழ முடியும்?"
'எப்படி விஞ்ஞான விதிகளின்படி விஞ்ஞான விதிகள் வரமுடியும்?' என்று கடவுள் கேட்டார்.
'ஆனால் நான் மறுபடி வாழ விரும்பவில்லையே..திருப்தியுடன் வாழ்ந்தேன்...இறந்தேன். ஏன், எதற்காக இங்கே இருக்கிறேன்..?"
"நீ இங்கே இருப்பதற்கு ஒரேயொரு காரணம் ரோசாலி வேண்டிக்கொண்டது தான்" என்றார் கடவுள்.
இந்த கதையின் உள்ளர்த்தத்தை இரவின் தனிமையில் யோசித்துப் பாருங்கள்.
நானும் சற்று நேரம் யோசித்தேன். எனக்கு தோன்றியதை நாளைக்கு பதிவாக போடுகிறேன். அதற்குள்ளாக, உங்களுக்கு என்ன தோன்றியது என்று சொல்லுங்கள்...:)
ஒரு பெரிய விஞ்ஞானி சாகும் தறுவாயில் இருந்தார். அவரருகே அவருடைய காதலி ரோசாலி உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு அவர் மேல் மிகுந்த காதல். விஞ்ஞானிக்கு முதல் காதல் விஞ்ஞானம் தான்.அப்புறம்தான் ரோசாலி.
"நாம் நிச்சயம் மறுபடி சந்திப்போம்....எங்கேயாவது, எப்போதாவது.." என்றாள்.
விஞ்ஞானி கஷ்டப்பட்டு இருமிக்கொண்டு சொன்னார்: "அபத்தமாக பேசாதே..உனக்கு விஞ்ஞானம் தெரியாதா..?"
ரோசாலிக்கு நிஜமாகவே விஞ்ஞானம் தெரியாது.
"ஆனால், நிச்சயம் நாம் சந்திப்போம் என்று நம்பிக்கை வைக்க மாட்டாயா..?"
விஞ்ஞானி தலையாட்டினார். "எனக்கு ஒரு வாழ்நாள் போதும்..எளிதாக,அழகாக அது முடிவடைகிறது...இல்லையேல் பிரபஞ்சம் மிகவும் சிக்கலாகிவிடும்.."
அவர் இறந்துபோனார்.
சில லட்சம் வருடங்கள் கடந்த பின் விஞ்ஞானி திடீரென்று கடவுளுக்கு முன் தான் நிற்பதை உணர்ந்தார். அவருக்கு குழப்பமாக இருந்தது.
"எனக்கு புரியவில்லை...எப்படி விஞ்ஞான விதிகள்படி நான் மறுபடி வாழ முடியும்?"
'எப்படி விஞ்ஞான விதிகளின்படி விஞ்ஞான விதிகள் வரமுடியும்?' என்று கடவுள் கேட்டார்.
'ஆனால் நான் மறுபடி வாழ விரும்பவில்லையே..திருப்தியுடன் வாழ்ந்தேன்...இறந்தேன். ஏன், எதற்காக இங்கே இருக்கிறேன்..?"
"நீ இங்கே இருப்பதற்கு ஒரேயொரு காரணம் ரோசாலி வேண்டிக்கொண்டது தான்" என்றார் கடவுள்.
இந்த கதையின் உள்ளர்த்தத்தை இரவின் தனிமையில் யோசித்துப் பாருங்கள்.
நானும் சற்று நேரம் யோசித்தேன். எனக்கு தோன்றியதை நாளைக்கு பதிவாக போடுகிறேன். அதற்குள்ளாக, உங்களுக்கு என்ன தோன்றியது என்று சொல்லுங்கள்...:)
ஞாயிறு, பிப்ரவரி 05, 2006
உடையார்
இம்முறை இந்தியா சென்றபோது, மும்பையிலேயே வாசம் எனக்கு. அதிகமாக பரிச்சயம் இல்லாத ஊர் என்பதாலும், எங்காவது செல்லலாம் என்று கிளம்பினால் குறைந்தபட்சம் 1 மணி நேரம் டிராபிக்கில் மாட்டி கொள்வோம் என்ற பயத்தினாலும், நண்பர்கள் யாரும் அங்கு இல்லாததாலும், வீட்டில் இருந்த புத்தககங்களை எல்லாம் எடுத்து புரட்டி பார்த்து கொண்டிருந்தேன். முன்பொரு முறை பாலகுமாரனின் 'உடையார்' குமுதத்தில் தொடராக வந்து கொண்டிருந்தது. அப்போது அதை படிக்கும் மனப்பக்குவமும் இல்லை. என் அப்பாவுடைய நண்பர் ஒருவர் 'உடையார்' பரிந்துரைத்தார். படிக்க ஆரம்பித்தேன். முதலில் பிடிக்கவில்லை. பிடிக்கவில்லை என்று சொல்வதைவிட, வித்தியாசமாக இருந்தது என்றே சொல்லவேண்டும். கல்கியின் நடையை படித்துவிட்டு, இதை படிப்பவர்களுக்கு கண்டிப்பாக முதலில் சற்று மாறுதலாக தான் இருக்கும். 'பொன்னியின் செல்வ'னின் தொடர்ச்சியாக இதை பார்க்க தோன்றும். எனக்கு அப்படிதான் இருந்தது. பிறகு, அந்த நினைப்பு இல்லாமல், இதை ஒரு தனிப்பட்ட இலக்கிய படைப்பாக ரசித்தல் வேண்டும்.
உடையார் என்பது அரசரை குறிப்பது. நாடு, மக்கள், செல்வம், வெற்றி, அழகு, பண்பு என்று அனைத்தும் உடையவனாதலால் அரசன் 'உடையார்' என்று அழைக்க படுகின்றான். இந்த படைப்பு முற்றிலும் ராஜராஜ சோழனுக்கே உரியது. ராஜராஜ சோழன் சிம்மாசனம் ஏறி 23 ஆண்டுகளுக்கு பிறகான காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்கள். வந்தியத்தேவனுக்கு மூட்டுவலி, குந்தவைக்கு முதுகுவலி, பொன்னியின் செல்வனுக்கு ஜலதோஷம் என்று படிக்கும்போது சற்று அதிர்ச்சியாக இருந்தது..:) எல்லோருக்கும் வயதான காலத்தில் கதை நடக்கிறது என்பதை ஒத்துக்கொள்ள எனக்கு சற்று நேரம் பிடித்தது. முக்கியமாக தஞ்சை பெரிய கோவிலின் படைப்பும், அதற்கான முயற்சிகள், அதனாலான பாதிப்புக்கள், மக்கள் வாழ்க்கை மாறுதல்கள், இவைகளை சுற்றியே கதை புனைந்திருக்கிறார். இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சரித்திர ஆதாரம் பெற்றவர்கள். எதுவுமே கற்பனை கிடையாது.
ஒரு கட்டிடம் கட்டுவது என்பது இந்த காலத்தில் அவ்வளவு பெரிய விஷயமில்லை. அதற்குண்டான சாமான்கள், பொருள் வசதி, ஆட்கள், அவர்களை நகர்த்த வண்டிகள், வசதியான சாலைகள், கட்டிட கணக்குகளை பார்க்க கணிணி, அளவுகளை துல்லியமாக போட்டு கொடுக்க மென்பொருள் என்று அனைத்துமே சுலபம்தான். அந்த காலத்தில் இதெல்லாம் எவ்வளவு கடினம் என்பதை அழகாக உணர்த்தியது 'உடையார்'. காவிரி பாயும், அழகிய விளைநிலங்கள் கொண்ட சமதரையான சோழ ராஜ்யத்தில் கற்கள் எப்படி கொண்டு வருவது? ஆட்கள் யாரைக்கொண்டு கோவில் கட்டுவது? எங்கு தங்க வைப்பது? ஒரு இடத்தில் கூடியிருக்கும் அவ்வளவு பெரிய ஆட்படைக்கு உணவளிப்பது எப்படி? அதனால் சமூகத்தில் எவ்விதமான மாறுதல்கள் ஏற்படும்? பொருள் கொண்டு வருவது எப்படி?
இந்த காலத்தில் இவ்வளவு வசதியிருந்தாலும், தொழில்நுட்பம் இருந்தாலும் நமக்கு தஞ்சை பெரிய கோவிலை போல ஒரு படைப்பை அமைக்க முடியவில்லையே! உலகத்தில் நம் நாட்டில் மட்டும்தான் கலாசாரம், கலை இருந்தது என்று சொல்வது முட்டாள்தனம். ப்ரான்சில் 'வெர்சாய்' அரண்மனை, லண்டனில் 'செயின்ட் பால்' என்று உலகெங்கும் மனிதன் படைப்பாளியாகத் தான் இருந்திருக்கிறான். ஆனால், ஐரோப்பா 'dark ages'ல் காட்டுமிராண்டித்தனமாக இருந்தபோது, செந்தமிழ்நாட்டில் மிக பண்புடைய, அறிவுடைய, தெய்வபக்தியும், தர்ம சிந்தனையும் உள்ள ஒரு அரசன் நெறி வழுவாமல் ஆட்சி புரிந்தான் என்பதை நினைக்கையில் பெருமையாக இருக்கிறது! :) உலகில் எத்தனையோ பெரிய அரசர்கள் இருந்தாலும், தர்மத்துக்கு தலைவணங்கி ஆட்சி செய்தவர்கள் இந்தியாவில் தான் இருந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. தனக்கென்று அரண்மனைகளையும், மாடமாளிகைகளையும் அமைத்துக் கொள்ளாமல், சிவனுக்கு ஆலயம் அமைத்திருக்கிறான் ராஜராஜன். செந்தமிழில் நால்வர் பொழிந்த அமுதான தேவாரப்பாடல்களை அழியாமல் மீட்டு கொடுத்து 'சிவபாதசேகரன்' என்ற பட்டம் பெற்றவன். பெளத்தமும், ஜைனமும் தலைதூக்க விடாமல் சைவமதம் தழைத்தோங்குவதற்கு அடிகோலியவன். அந்த கால தமிழர் நாகரீகமும், கலையும், பக்தியும் உலகமறியும் சின்னமாகவே தஞ்சை பெரிய கோவிலை அமைத்திருக்கிறான். முயற்சி வீண்போகவில்லை! இன்றும் கம்பீரமாக இராஜராஜன் பெயரை சொல்லி வானளாவி நிற்கிறது பெரிய கோவில்.
11 பாகங்கள் வெளிவந்திருக்கின்றன. இன்னும் இரண்டு பாகம் வரும். நிச்சயமாக ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டும். ஆவலுடன் காத்திருக்கிறேன்.
பின்குறிப்பு:
'பொன்னியின் செல்வன்' ரசிகர்களுக்கு ஆதித்த கரிகாலன் கொலைக்கு யார் காரணம், அவர்கள் என்ன ஆனார்கள், உத்தம சோழன் ஆட்சி எப்படியமைந்தது, வந்தியத்தேவன் என்னவானான் என்ற பல கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது..:) நீங்கள் எதிர்பார்க்காத பதிலாகக் கூட இருக்கலாம்!
உடையார் என்பது அரசரை குறிப்பது. நாடு, மக்கள், செல்வம், வெற்றி, அழகு, பண்பு என்று அனைத்தும் உடையவனாதலால் அரசன் 'உடையார்' என்று அழைக்க படுகின்றான். இந்த படைப்பு முற்றிலும் ராஜராஜ சோழனுக்கே உரியது. ராஜராஜ சோழன் சிம்மாசனம் ஏறி 23 ஆண்டுகளுக்கு பிறகான காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்கள். வந்தியத்தேவனுக்கு மூட்டுவலி, குந்தவைக்கு முதுகுவலி, பொன்னியின் செல்வனுக்கு ஜலதோஷம் என்று படிக்கும்போது சற்று அதிர்ச்சியாக இருந்தது..:) எல்லோருக்கும் வயதான காலத்தில் கதை நடக்கிறது என்பதை ஒத்துக்கொள்ள எனக்கு சற்று நேரம் பிடித்தது. முக்கியமாக தஞ்சை பெரிய கோவிலின் படைப்பும், அதற்கான முயற்சிகள், அதனாலான பாதிப்புக்கள், மக்கள் வாழ்க்கை மாறுதல்கள், இவைகளை சுற்றியே கதை புனைந்திருக்கிறார். இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சரித்திர ஆதாரம் பெற்றவர்கள். எதுவுமே கற்பனை கிடையாது.
ஒரு கட்டிடம் கட்டுவது என்பது இந்த காலத்தில் அவ்வளவு பெரிய விஷயமில்லை. அதற்குண்டான சாமான்கள், பொருள் வசதி, ஆட்கள், அவர்களை நகர்த்த வண்டிகள், வசதியான சாலைகள், கட்டிட கணக்குகளை பார்க்க கணிணி, அளவுகளை துல்லியமாக போட்டு கொடுக்க மென்பொருள் என்று அனைத்துமே சுலபம்தான். அந்த காலத்தில் இதெல்லாம் எவ்வளவு கடினம் என்பதை அழகாக உணர்த்தியது 'உடையார்'. காவிரி பாயும், அழகிய விளைநிலங்கள் கொண்ட சமதரையான சோழ ராஜ்யத்தில் கற்கள் எப்படி கொண்டு வருவது? ஆட்கள் யாரைக்கொண்டு கோவில் கட்டுவது? எங்கு தங்க வைப்பது? ஒரு இடத்தில் கூடியிருக்கும் அவ்வளவு பெரிய ஆட்படைக்கு உணவளிப்பது எப்படி? அதனால் சமூகத்தில் எவ்விதமான மாறுதல்கள் ஏற்படும்? பொருள் கொண்டு வருவது எப்படி?
இந்த காலத்தில் இவ்வளவு வசதியிருந்தாலும், தொழில்நுட்பம் இருந்தாலும் நமக்கு தஞ்சை பெரிய கோவிலை போல ஒரு படைப்பை அமைக்க முடியவில்லையே! உலகத்தில் நம் நாட்டில் மட்டும்தான் கலாசாரம், கலை இருந்தது என்று சொல்வது முட்டாள்தனம். ப்ரான்சில் 'வெர்சாய்' அரண்மனை, லண்டனில் 'செயின்ட் பால்' என்று உலகெங்கும் மனிதன் படைப்பாளியாகத் தான் இருந்திருக்கிறான். ஆனால், ஐரோப்பா 'dark ages'ல் காட்டுமிராண்டித்தனமாக இருந்தபோது, செந்தமிழ்நாட்டில் மிக பண்புடைய, அறிவுடைய, தெய்வபக்தியும், தர்ம சிந்தனையும் உள்ள ஒரு அரசன் நெறி வழுவாமல் ஆட்சி புரிந்தான் என்பதை நினைக்கையில் பெருமையாக இருக்கிறது! :) உலகில் எத்தனையோ பெரிய அரசர்கள் இருந்தாலும், தர்மத்துக்கு தலைவணங்கி ஆட்சி செய்தவர்கள் இந்தியாவில் தான் இருந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. தனக்கென்று அரண்மனைகளையும், மாடமாளிகைகளையும் அமைத்துக் கொள்ளாமல், சிவனுக்கு ஆலயம் அமைத்திருக்கிறான் ராஜராஜன். செந்தமிழில் நால்வர் பொழிந்த அமுதான தேவாரப்பாடல்களை அழியாமல் மீட்டு கொடுத்து 'சிவபாதசேகரன்' என்ற பட்டம் பெற்றவன். பெளத்தமும், ஜைனமும் தலைதூக்க விடாமல் சைவமதம் தழைத்தோங்குவதற்கு அடிகோலியவன். அந்த கால தமிழர் நாகரீகமும், கலையும், பக்தியும் உலகமறியும் சின்னமாகவே தஞ்சை பெரிய கோவிலை அமைத்திருக்கிறான். முயற்சி வீண்போகவில்லை! இன்றும் கம்பீரமாக இராஜராஜன் பெயரை சொல்லி வானளாவி நிற்கிறது பெரிய கோவில்.
11 பாகங்கள் வெளிவந்திருக்கின்றன. இன்னும் இரண்டு பாகம் வரும். நிச்சயமாக ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டும். ஆவலுடன் காத்திருக்கிறேன்.
பின்குறிப்பு:
'பொன்னியின் செல்வன்' ரசிகர்களுக்கு ஆதித்த கரிகாலன் கொலைக்கு யார் காரணம், அவர்கள் என்ன ஆனார்கள், உத்தம சோழன் ஆட்சி எப்படியமைந்தது, வந்தியத்தேவன் என்னவானான் என்ற பல கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது..:) நீங்கள் எதிர்பார்க்காத பதிலாகக் கூட இருக்கலாம்!
திங்கள், ஜனவரி 09, 2006
காட்டழகிய சிங்கபெருமாள்
திருவரங்கத்துக்கும் திருவானைக்காவுக்கும் நடுவில் ஒரு இரயில்வே க்ராசிங் உள்ளது. திருவரங்கம் இரயில்நிலையம் அருகே இருக்கும். அதைத் தாண்டி அப்பால் சென்றால் திருவானைக்கா. திருவரங்கம் கிழக்கு வெள்ளை கோபுரத்துக்கு நேர்கோட்டில், திருவானைக்கா பக்கத்தில் உள்ளது ஸ்ரீ காட்டழகிய சிங்கபெருமாள் கோவில். பெரிய ஆடம்பர கோபுரங்களோ, மாடங்களோ எதுவும் இல்லாத மிக எளிமையான கோவில். அண்மையில், மூன்று வருடங்களுக்கு முன்னால் கும்பாபிஷேகம் செய்வித்தார்கள். திருவரங்கம் கோவில் நிர்வாகத்தை சேர்ந்த கோவில்.
பெருமாள் அழகிய நரசிம்மமூர்த்தியாக காட்சியளிக்கிறார். இடது தொடையில் தாயாரை மடியில் வைத்து, ஒரு கையால் அணைத்து கொண்டு இருப்பார். இன்னொரு கையால் அபயஹஸ்தம் அளித்துக்கொண்டிருப்பார். பெரிய, தத்ரூபமான மூர்த்தி. என்னதான் பயமுறுத்தும் தோற்றமுடையவராயிருந்தாலும், முகத்தில் ஒரு புன்முருவல் பூத்திருக்கும்.
முன்காலத்தில், இப்பகுதிகளில் அடர்ந்து மண்டி கிடந்த காடுகளில் யானைகள் அட்டகாசம் தாங்காமல், காட்டினிடையே சிங்கபெருமாள் கோவில் அமைத்திருக்கிறார்கள். கேசரி கஜராஜனுக்கு இயற்கை பகைவனாயிற்றே? நான் ஸ்ரீரங்கம் சென்ற புதிதில், எனக்கு மிகவும் பொழுது போகாது. பெரிய நகரங்களில் உள்ள பொழுது போக்குகளோ, hang-outs அங்கு கிடையாது. சரித்திரத்திலும், அந்தகால கோவில் கட்டிடக்கலையிலும் ஈடுபாடு உண்டென்பதால், திருச்சியை சுற்றியிருக்கும் பல கோவில்களை சென்று பார்ப்பதிலேயே பொழுது போக்குவேன்.
ஒரு நாள், திருவரங்கம் கோவிலில் கூட்டம் ஆளை நெரித்துவிடும் போல் இருந்தது. கோவிலிருந்து விடுபட்டு, சற்று காற்று வாங்கினால் போதும் என்று எனக்கு ஆகிவிட்டது. அதனால், ஒரு நோக்கமே இல்லாமல், திருவரங்கம் இரயில் நிலையத்தை பார்த்து நடந்தேன். அங்கு சற்று காற்று வரும். அந்த நேரத்தில், எந்த வண்டியும் வராது. அப்போதெல்லாம், மனத்தில் அமைதியில்லாமல் எதையோ நினைத்து தவித்த காலம். கொஞ்சம் தனிமையில் இருக்கலாமே என்று சென்றேன். அப்போது தூரத்தில் விளக்கு எரிவது தெரிந்தது. அதை நோக்கி கால்போன போக்கில் நடந்தேன். சென்றால், காட்டழகிய சிங்கர் கிடைத்தார்!
அப்போதெல்லாம் அந்த கோவிலில் அதிக ஜனநடமாட்டம் கிடையாது. வெரிச்சோடியே இருக்கும். சாந்தி குடிகொண்டிருக்கும். ஸ்ரீரங்கத்தின்அலை மோதும் ஜன சமுத்திரத்துக்கு நடுவே ஒரு அமைதித்தீவாகவே அந்த திருக்கோவிலை நாடி செல்வேன். இப்போதெல்லாம், அங்கும் கூட்டம் ஜாஸ்தியாகிவிட்டது. ஒரு வகையில் நல்லது தான். வருகிற திரவியத்தால் கோவில் திருப்பணி நடக்க உதவுமே!
நாளை வைகுண்ட ஏகாதசி உத்சவம். திருவரங்கத்தின் சுவர்க்க வாசல் திறக்கும். திருவரங்கம் வைகுண்டமாக உருவெடுக்கும். காவிரி, வைகுண்டத்தின் விராஜ நதியாகவே மாறி விடுவாள். எல்லோருக்கும் எனது தாமதமான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
பெருமாள் அழகிய நரசிம்மமூர்த்தியாக காட்சியளிக்கிறார். இடது தொடையில் தாயாரை மடியில் வைத்து, ஒரு கையால் அணைத்து கொண்டு இருப்பார். இன்னொரு கையால் அபயஹஸ்தம் அளித்துக்கொண்டிருப்பார். பெரிய, தத்ரூபமான மூர்த்தி. என்னதான் பயமுறுத்தும் தோற்றமுடையவராயிருந்தாலும், முகத்தில் ஒரு புன்முருவல் பூத்திருக்கும்.
முன்காலத்தில், இப்பகுதிகளில் அடர்ந்து மண்டி கிடந்த காடுகளில் யானைகள் அட்டகாசம் தாங்காமல், காட்டினிடையே சிங்கபெருமாள் கோவில் அமைத்திருக்கிறார்கள். கேசரி கஜராஜனுக்கு இயற்கை பகைவனாயிற்றே? நான் ஸ்ரீரங்கம் சென்ற புதிதில், எனக்கு மிகவும் பொழுது போகாது. பெரிய நகரங்களில் உள்ள பொழுது போக்குகளோ, hang-outs அங்கு கிடையாது. சரித்திரத்திலும், அந்தகால கோவில் கட்டிடக்கலையிலும் ஈடுபாடு உண்டென்பதால், திருச்சியை சுற்றியிருக்கும் பல கோவில்களை சென்று பார்ப்பதிலேயே பொழுது போக்குவேன்.
ஒரு நாள், திருவரங்கம் கோவிலில் கூட்டம் ஆளை நெரித்துவிடும் போல் இருந்தது. கோவிலிருந்து விடுபட்டு, சற்று காற்று வாங்கினால் போதும் என்று எனக்கு ஆகிவிட்டது. அதனால், ஒரு நோக்கமே இல்லாமல், திருவரங்கம் இரயில் நிலையத்தை பார்த்து நடந்தேன். அங்கு சற்று காற்று வரும். அந்த நேரத்தில், எந்த வண்டியும் வராது. அப்போதெல்லாம், மனத்தில் அமைதியில்லாமல் எதையோ நினைத்து தவித்த காலம். கொஞ்சம் தனிமையில் இருக்கலாமே என்று சென்றேன். அப்போது தூரத்தில் விளக்கு எரிவது தெரிந்தது. அதை நோக்கி கால்போன போக்கில் நடந்தேன். சென்றால், காட்டழகிய சிங்கர் கிடைத்தார்!
அப்போதெல்லாம் அந்த கோவிலில் அதிக ஜனநடமாட்டம் கிடையாது. வெரிச்சோடியே இருக்கும். சாந்தி குடிகொண்டிருக்கும். ஸ்ரீரங்கத்தின்அலை மோதும் ஜன சமுத்திரத்துக்கு நடுவே ஒரு அமைதித்தீவாகவே அந்த திருக்கோவிலை நாடி செல்வேன். இப்போதெல்லாம், அங்கும் கூட்டம் ஜாஸ்தியாகிவிட்டது. ஒரு வகையில் நல்லது தான். வருகிற திரவியத்தால் கோவில் திருப்பணி நடக்க உதவுமே!
நாளை வைகுண்ட ஏகாதசி உத்சவம். திருவரங்கத்தின் சுவர்க்க வாசல் திறக்கும். திருவரங்கம் வைகுண்டமாக உருவெடுக்கும். காவிரி, வைகுண்டத்தின் விராஜ நதியாகவே மாறி விடுவாள். எல்லோருக்கும் எனது தாமதமான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
வெள்ளி, டிசம்பர் 23, 2005
மறுபடியும் காவிரி...
செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும்
கஞ்ச வேட்கையில் காந்தமன் வேண்ட
அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை
செங்குணக் கொழுகிய சம்பாபதி அயல்
பொங்குநீர்ப் பரப்போடு பொருந்தித் தோன்ற
திருச்சி கொள்ளிடத்தில் தண்ணீர் இருந்து நான் பார்த்தேயில்லை. சங்ககால சோழர்கள் காலத்தில், காவிரி கரைபுரண்டு ஓடி நாட்டை அழித்துவிடுகிறது என்று தண்ணீருக்கு மாற்றுபாதையாக அமைக்கப்பெற்றதே கொள்ளிடம். காவிரி நீருக்கு 'கொள்ளும் இட' மாக அமைக்கப்பெற்ற செயற்கை நதி, திருச்சியில் பலகாலமாக வற்றிப்போய் ஒரு சிறிய வாய்க்காலாகவே ஓடிக்கொண்டிருந்தது. கடந்த 50-70 வருட காலத்தில், இப்படி கொள்ளிடம் கரைபுரண்டு ஓடியதைப் யாருமே பார்த்ததில்லையென என் நண்பரின் அன்னை நேற்றுக் கூறினார். திருவரங்கத்தில், இராஜகோபுரத்துக்கு சற்று தெற்கே ஓடும் திருமஞ்சன காவேரி, ரோட்டை தொட்டுக்கொண்டு ஓடுகிறதாம். இப்படி, காவிரி பேச்சு வந்த போது, என்றோ படித்த இந்த பாடல் ஞாபகம் வந்தது.
சூரிய வம்சத்தாரான சோழர் குலத்தில் தோன்றியவன் காந்தமன் என்ற அரசன். சோழ நாட்டில் ஜீவநதி எதுவுமில்லையே என்ற வருந்தினான். சஹ்யாத்ரி மலைமகளான காவிரியை சோழநாட்டுக்கு அழைத்து வருவதற்காக இறைவனிடம் வேண்டி வரம் பெற்றான். அப்படிப்பட்ட காவிரியை, அகத்திய முனிவர் காவிரிக்குமரி மீது பாசம் கொண்டு தன் கமண்டலுவில் அடைத்து வைத்தார். விநாயகர் காக்கை உருவத்தில் அந்த நதியை விடுதலை செய்ய, அவள் விரிந்து, பரந்து சோழ தேசத்தில் ஒய்யார நடைப் போட்டாள். அவள் ஓடிய இடத்திலெல்லாம், காந்தமன் எண்ணியபடியே, சோழ தேசம் வனப்புப் பெற்றது. காவிரி கடைசியில் காவிரிபூம்பட்டினத்தில் கடலுடன் கலக்கிறாள். அந்த காலத்தில், காவிரிபூம்பட்டினத்துக்கு, 'சம்பாபதி' என்று பெயர். இத்தகைய அழகிய பாடலை இயற்றியவர் யாரென எனக்கு தெரியவில்லை. காஞ்சி மஹாபெரியவரின் 'அருளுரை' யில் படித்ததாக நினைவு.
இப்போது கரைகொள்ளாமல் ஓடும் காவிரியை கூடிய சீக்கிரம் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்....:)
கஞ்ச வேட்கையில் காந்தமன் வேண்ட
அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை
செங்குணக் கொழுகிய சம்பாபதி அயல்
பொங்குநீர்ப் பரப்போடு பொருந்தித் தோன்ற
திருச்சி கொள்ளிடத்தில் தண்ணீர் இருந்து நான் பார்த்தேயில்லை. சங்ககால சோழர்கள் காலத்தில், காவிரி கரைபுரண்டு ஓடி நாட்டை அழித்துவிடுகிறது என்று தண்ணீருக்கு மாற்றுபாதையாக அமைக்கப்பெற்றதே கொள்ளிடம். காவிரி நீருக்கு 'கொள்ளும் இட' மாக அமைக்கப்பெற்ற செயற்கை நதி, திருச்சியில் பலகாலமாக வற்றிப்போய் ஒரு சிறிய வாய்க்காலாகவே ஓடிக்கொண்டிருந்தது. கடந்த 50-70 வருட காலத்தில், இப்படி கொள்ளிடம் கரைபுரண்டு ஓடியதைப் யாருமே பார்த்ததில்லையென என் நண்பரின் அன்னை நேற்றுக் கூறினார். திருவரங்கத்தில், இராஜகோபுரத்துக்கு சற்று தெற்கே ஓடும் திருமஞ்சன காவேரி, ரோட்டை தொட்டுக்கொண்டு ஓடுகிறதாம். இப்படி, காவிரி பேச்சு வந்த போது, என்றோ படித்த இந்த பாடல் ஞாபகம் வந்தது.
சூரிய வம்சத்தாரான சோழர் குலத்தில் தோன்றியவன் காந்தமன் என்ற அரசன். சோழ நாட்டில் ஜீவநதி எதுவுமில்லையே என்ற வருந்தினான். சஹ்யாத்ரி மலைமகளான காவிரியை சோழநாட்டுக்கு அழைத்து வருவதற்காக இறைவனிடம் வேண்டி வரம் பெற்றான். அப்படிப்பட்ட காவிரியை, அகத்திய முனிவர் காவிரிக்குமரி மீது பாசம் கொண்டு தன் கமண்டலுவில் அடைத்து வைத்தார். விநாயகர் காக்கை உருவத்தில் அந்த நதியை விடுதலை செய்ய, அவள் விரிந்து, பரந்து சோழ தேசத்தில் ஒய்யார நடைப் போட்டாள். அவள் ஓடிய இடத்திலெல்லாம், காந்தமன் எண்ணியபடியே, சோழ தேசம் வனப்புப் பெற்றது. காவிரி கடைசியில் காவிரிபூம்பட்டினத்தில் கடலுடன் கலக்கிறாள். அந்த காலத்தில், காவிரிபூம்பட்டினத்துக்கு, 'சம்பாபதி' என்று பெயர். இத்தகைய அழகிய பாடலை இயற்றியவர் யாரென எனக்கு தெரியவில்லை. காஞ்சி மஹாபெரியவரின் 'அருளுரை' யில் படித்ததாக நினைவு.
இப்போது கரைகொள்ளாமல் ஓடும் காவிரியை கூடிய சீக்கிரம் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்....:)
செவ்வாய், டிசம்பர் 20, 2005
வல்லவரையன் வந்தியத்தேவன்
ஒரு ஆறு வருட காலம் முன்னால் 'பொன்னியின் செல்வன்' படித்தேன். படித்ததிலிருந்து, வல்லவரையன் வந்தியத்தேவன் மேல் ஒரே காதல் தான்! :) இப்பொழுது, மறுபடியும் படிக்கிறேன். வந்தியத்தேவன் மீது பற்றுக் கொண்டு, Google இணையதளத்தில் அவன் பெயரைப் போட்டால் என்னதான் வருகிறது பார்ப்போமே என்று போட்டேன். அப்போது கிடைத்த ஒரு தளம் இது.
அதிலிருந்து கிடைத்த இன்னொரு தளம்: www.varalaaru.com
தமிழ் சரித்திர வரலாறு பற்றிய e-zine ஆரம்பித்திருக்கிறார்கள். வந்தியத்தேவன் எந்தெந்த ஊருக்கெல்லாம் 'பொன்னியின் செல்வ'னில் சென்றிருந்தானோ, அந்த ஊருக்கெல்லாம் சென்று கருத்து சேகரித்திருக்கின்றனர்! பார்க்கவே மிக சந்தோஷமாக இருந்தது...:)
அதிலிருந்து கிடைத்த இன்னொரு தளம்: www.varalaaru.com
தமிழ் சரித்திர வரலாறு பற்றிய e-zine ஆரம்பித்திருக்கிறார்கள். வந்தியத்தேவன் எந்தெந்த ஊருக்கெல்லாம் 'பொன்னியின் செல்வ'னில் சென்றிருந்தானோ, அந்த ஊருக்கெல்லாம் சென்று கருத்து சேகரித்திருக்கின்றனர்! பார்க்கவே மிக சந்தோஷமாக இருந்தது...:)
காதல் கவிதை!
'ஐ லவ் யூ' விகடன் ஸ்பெஷலில் நடிகர் பரத் 'காதல் பத்து' என்று ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவர் எழுதிய காதல் கவிதை எனக்கு பிடித்திருந்தது:
உயரத்தில் இருப்பதால் நீ நிலாதான்!
ஆனால் உன்னையே நீ பார்க்க என்னிடம் தான் வர வேண்டும்!
ஏனெனில்,
காதல் நீர் நிறைந்த குளம் நான்!
நிலவும், தாமரை குளமும், அல்லி தண்டுகளை வைத்தும், பல ஆயிரம் காலங்களாக ஸ்ருங்கார ரசத்தில் கவிதை வரித்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அதையே புதிதான வகையில் புனைந்தால் இன்றும் ரசிக்கத்தான் செய்கிறோம். காதல் என்றும் இளமையானதன்றோ? :) 'அடடா, என்னால் இப்படி எழுத முடியவில்லையே' என்று ஆதங்கப்பட வைத்த கவிதை இது!
உயரத்தில் இருப்பதால் நீ நிலாதான்!
ஆனால் உன்னையே நீ பார்க்க என்னிடம் தான் வர வேண்டும்!
ஏனெனில்,
காதல் நீர் நிறைந்த குளம் நான்!
நிலவும், தாமரை குளமும், அல்லி தண்டுகளை வைத்தும், பல ஆயிரம் காலங்களாக ஸ்ருங்கார ரசத்தில் கவிதை வரித்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அதையே புதிதான வகையில் புனைந்தால் இன்றும் ரசிக்கத்தான் செய்கிறோம். காதல் என்றும் இளமையானதன்றோ? :) 'அடடா, என்னால் இப்படி எழுத முடியவில்லையே' என்று ஆதங்கப்பட வைத்த கவிதை இது!
வியாழன், டிசம்பர் 01, 2005
அன்பே சிவம்
ப்ரியா "சிந்தனை சிதரல்" என்று அவருடைய வலைப்பதிவில் எழுதி வருகிறார். மனநோயாளிகள் பற்றியும், அவர்களை குணமாக்குதல் பற்றியும் மிக அழகான சில விஷயங்களை கூறியிருக்கிறார். ப்ரியாவின் சிந்தனைகள் சிதறி என் மனதில் சில எண்ணங்களை கிளப்பின...
என்னுடைய உறவுக்காறர் ஒருவருக்கு மன வளர்ச்சி குன்றிய ஒரு பையன் இருக்கிறான். குழந்தை பிரசவத்தின் போது, பிரசவம் பார்த்த நர்ஸ் ஒரு பிழை செய்ததால் குழந்தையின் மூளைக்கு ரத்த ஓட்டம் ஒரு நோடி போகாமல் மூளை வளர்ச்சி குன்றி விட்டது என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். வயது பல ஆனாலும், இரண்டு வயதிற்குறிய ஒரு குழந்தையின் மன வளர்ச்சிதான் அவனுக்கு. இரண்டு வயது குழந்தையை கையாள எவ்வளவு பொறுமை வேண்டுமோ, அதே பொறுமையுடன் தான் அவனையும் நடத்த வேண்டும். சிசுருஷை செய்ய வேண்டும். அவனது தாய், தந்தையர் நான் மிகவும் வியக்கும், மதிக்கும் மனிதர்கள். அசாத்திய பொறுமைசாலிகள். "அய்யோ, நமக்கு இப்படி நேர்ந்து விட்டதே!" என்று அங்கலாய்த்துக் கொண்டு, சதா அழுது கொண்டிருக்காமல், அதையும் மீறி வாழ்க்கையை சுவாரஸ்யத்துடன் நடத்தும் பாராட்டுதற்குறிய மனிதர்கள் அவர்கள். தன் குழந்தையை வெறுக்காமல், பொறுமையிழக்காமல், அவன் நிலைமையை உணர்ந்து அவனை மிக்க பாசத்துடன், அவனை அரவணைத்து அவனுக்கு உதவும் நல் மனது மிக்கவர்கள்.
ஏதோ மனநோய் காரணமாக மருந்து உண்டு, மிக பருமனாக இருக்கும் பெண்ணை அவர்கள் வீட்டாரே வெறுப்பதாக ப்ரியா எழுதியிருந்தார். சாதாரணமாகவே ஏதோ ஊனம் இருப்பவரை கண்டாலோ, அல்லது சற்று அழகு குறைந்து காணப்பட்டவரை பார்த்தாலோ, மனிதர்களுக்கு ஏளனமும், அருவருப்பும் தான் முதலில் வருகிறது. இந்த மனப்போக்கு குழந்தை பருவத்திலோ, டீனேஜ் பருவத்திலோ வரும் மனப்பக்குவமில்லாத response என்று நான் நினைத்த காலமுண்டு. ஆனால் வயதும், அனுபவமும், படிப்பும் மிக்க மனிதர்களும் இப்படித்தான் அருவருப்படைகிறார்கள் என்று ஒரு கசப்பான பாடம் பின்னர் கற்றுக்கொண்டேன். இதில் ஒரு superiority complex வேறு சிலபேருக்கு. "எனக்கு இப்படியெல்லாம் இல்லை. நான் உயர்ந்தவன்!" என்று ஜம்பமாக அவர்கள் மனதில் நினைப்பது முகத்திலேயே பிரதிபலிக்கும். மேலும் சிலர், "இவர் ஏதோ பாவம் செய்திருக்கிறான். நன்றாய் வேண்டும்.நான் பெரிய புண்யாத்மாவாக்கும்" என்று தேவையில்லாத ஆன்மீகத்தை புகட்ட பார்ப்பார்கள். அந்த பையன் அருகில் வந்தாலே ஏதோ தீண்டத்தகாதவன் அருகில் வந்த மாதிரி, விலகி போவார்கள். அவன் ஏதாவது கேட்டால் எரிந்து விழுவார்கள். அவனுடைய நிலைமை அவனை மீறியது என்பதை அறியாமல் நடந்து கொள்வார்கள். நான் இதை கண்கூடாக பார்த்ததினால் தான் ப்ரியாவின் பதிவு எனக்கு பிடித்திருந்தது.
என்னை பொறுத்த வரையில், நமக்கு ஒன்று நேர்ந்து விட்டால் சமாளிப்பது அவ்வளவு பெரிய காரியம் இல்லை. ஏனென்றால், வேறு வழி கிடையாது, சமாளித்து தான் ஆக வேண்டும். பிறர் துன்பப்படும் போது, கண்ணை மூடிக்கொண்டு போய்விடலாம். கண்ணை விட்டு அகன்றதும், அந்த காட்சி மறந்தும் போய்விடும். ஆனால் என்ன தர்மசங்கடமான விஷயமாயிருந்தாலும், அதை எதிர்நோக்குவது கடினமல்லவா? பிறர் படும் கஷ்டத்தை புரிந்து கொண்டு அனுசரணையாக நடந்து கொள்ள மன வலிமையும், ஆத்மபலமும் வேண்டும். அழ்ந்த அன்பினாலேயே வரக்கூடிய குணங்கள் அவை என்று நான் நினைக்கிறேன்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இவ்வளவு மூளையுள்ள, சுவாதீனமுள்ள மனிதர்கள் பாசமாக நடந்து கொள்வதில்லை. ஆனால், அந்த பையனோ மனிதர்கள் மீது மிகவும் பாசமாக இருப்பான். வீட்டிற்கு யார் வந்தாலும், வாஞ்சையுடன் "காபி சாப்பிடறியா?" என்று கேட்பான். அவர்கள் கோபப்பட்டால் கூட பொருட்படுத்தாமல், "மறுபடியும் எப்போ வர? பார்க்கணும் போல இருக்கு..." என்று விடைகூறுவான். ஆத்திகமும் நாத்திகமும், நல்லதும் கெடுதலும், சரியும் தவறும் உணர்ந்தும் புரிந்துகொள்ளுதல் இல்லாமல் இயங்கும் மனிதர்கள் மேலா? எதுவுமே அறியாமல், தன்னை வெறுபோரிடமும் பாசமாக நடந்து கொள்ளும் அவன் மேலா?
"ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்"
என்ற வரிகள் தான் மனதிற்கு நினைவு வருகின்றன....
என்னுடைய உறவுக்காறர் ஒருவருக்கு மன வளர்ச்சி குன்றிய ஒரு பையன் இருக்கிறான். குழந்தை பிரசவத்தின் போது, பிரசவம் பார்த்த நர்ஸ் ஒரு பிழை செய்ததால் குழந்தையின் மூளைக்கு ரத்த ஓட்டம் ஒரு நோடி போகாமல் மூளை வளர்ச்சி குன்றி விட்டது என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். வயது பல ஆனாலும், இரண்டு வயதிற்குறிய ஒரு குழந்தையின் மன வளர்ச்சிதான் அவனுக்கு. இரண்டு வயது குழந்தையை கையாள எவ்வளவு பொறுமை வேண்டுமோ, அதே பொறுமையுடன் தான் அவனையும் நடத்த வேண்டும். சிசுருஷை செய்ய வேண்டும். அவனது தாய், தந்தையர் நான் மிகவும் வியக்கும், மதிக்கும் மனிதர்கள். அசாத்திய பொறுமைசாலிகள். "அய்யோ, நமக்கு இப்படி நேர்ந்து விட்டதே!" என்று அங்கலாய்த்துக் கொண்டு, சதா அழுது கொண்டிருக்காமல், அதையும் மீறி வாழ்க்கையை சுவாரஸ்யத்துடன் நடத்தும் பாராட்டுதற்குறிய மனிதர்கள் அவர்கள். தன் குழந்தையை வெறுக்காமல், பொறுமையிழக்காமல், அவன் நிலைமையை உணர்ந்து அவனை மிக்க பாசத்துடன், அவனை அரவணைத்து அவனுக்கு உதவும் நல் மனது மிக்கவர்கள்.
ஏதோ மனநோய் காரணமாக மருந்து உண்டு, மிக பருமனாக இருக்கும் பெண்ணை அவர்கள் வீட்டாரே வெறுப்பதாக ப்ரியா எழுதியிருந்தார். சாதாரணமாகவே ஏதோ ஊனம் இருப்பவரை கண்டாலோ, அல்லது சற்று அழகு குறைந்து காணப்பட்டவரை பார்த்தாலோ, மனிதர்களுக்கு ஏளனமும், அருவருப்பும் தான் முதலில் வருகிறது. இந்த மனப்போக்கு குழந்தை பருவத்திலோ, டீனேஜ் பருவத்திலோ வரும் மனப்பக்குவமில்லாத response என்று நான் நினைத்த காலமுண்டு. ஆனால் வயதும், அனுபவமும், படிப்பும் மிக்க மனிதர்களும் இப்படித்தான் அருவருப்படைகிறார்கள் என்று ஒரு கசப்பான பாடம் பின்னர் கற்றுக்கொண்டேன். இதில் ஒரு superiority complex வேறு சிலபேருக்கு. "எனக்கு இப்படியெல்லாம் இல்லை. நான் உயர்ந்தவன்!" என்று ஜம்பமாக அவர்கள் மனதில் நினைப்பது முகத்திலேயே பிரதிபலிக்கும். மேலும் சிலர், "இவர் ஏதோ பாவம் செய்திருக்கிறான். நன்றாய் வேண்டும்.நான் பெரிய புண்யாத்மாவாக்கும்" என்று தேவையில்லாத ஆன்மீகத்தை புகட்ட பார்ப்பார்கள். அந்த பையன் அருகில் வந்தாலே ஏதோ தீண்டத்தகாதவன் அருகில் வந்த மாதிரி, விலகி போவார்கள். அவன் ஏதாவது கேட்டால் எரிந்து விழுவார்கள். அவனுடைய நிலைமை அவனை மீறியது என்பதை அறியாமல் நடந்து கொள்வார்கள். நான் இதை கண்கூடாக பார்த்ததினால் தான் ப்ரியாவின் பதிவு எனக்கு பிடித்திருந்தது.
என்னை பொறுத்த வரையில், நமக்கு ஒன்று நேர்ந்து விட்டால் சமாளிப்பது அவ்வளவு பெரிய காரியம் இல்லை. ஏனென்றால், வேறு வழி கிடையாது, சமாளித்து தான் ஆக வேண்டும். பிறர் துன்பப்படும் போது, கண்ணை மூடிக்கொண்டு போய்விடலாம். கண்ணை விட்டு அகன்றதும், அந்த காட்சி மறந்தும் போய்விடும். ஆனால் என்ன தர்மசங்கடமான விஷயமாயிருந்தாலும், அதை எதிர்நோக்குவது கடினமல்லவா? பிறர் படும் கஷ்டத்தை புரிந்து கொண்டு அனுசரணையாக நடந்து கொள்ள மன வலிமையும், ஆத்மபலமும் வேண்டும். அழ்ந்த அன்பினாலேயே வரக்கூடிய குணங்கள் அவை என்று நான் நினைக்கிறேன்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இவ்வளவு மூளையுள்ள, சுவாதீனமுள்ள மனிதர்கள் பாசமாக நடந்து கொள்வதில்லை. ஆனால், அந்த பையனோ மனிதர்கள் மீது மிகவும் பாசமாக இருப்பான். வீட்டிற்கு யார் வந்தாலும், வாஞ்சையுடன் "காபி சாப்பிடறியா?" என்று கேட்பான். அவர்கள் கோபப்பட்டால் கூட பொருட்படுத்தாமல், "மறுபடியும் எப்போ வர? பார்க்கணும் போல இருக்கு..." என்று விடைகூறுவான். ஆத்திகமும் நாத்திகமும், நல்லதும் கெடுதலும், சரியும் தவறும் உணர்ந்தும் புரிந்துகொள்ளுதல் இல்லாமல் இயங்கும் மனிதர்கள் மேலா? எதுவுமே அறியாமல், தன்னை வெறுபோரிடமும் பாசமாக நடந்து கொள்ளும் அவன் மேலா?
"ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்"
என்ற வரிகள் தான் மனதிற்கு நினைவு வருகின்றன....
புதன், நவம்பர் 09, 2005
வாழ்க்கையின் அவசரத்தில் கால்களில் சக்கரம் கட்டி கொண்டு ஓடுகையில், அன்றாடம் என்னை சுற்றியிருக்கும் பல அழகிய காட்சிகளை, சம்பவங்களை ரசிக்க மறந்துவிடுகிறேன். படைப்பின் அற்புதங்களான பல விஷயங்களை நாம் வாஸ்தவமாக எடுத்து கொண்டு போய்விடுகிறோம். ஒரு குழந்தைக்கு உலகில் எல்லாமே புதியது. தன்னை சுற்றியிருக்கும் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்கின்ற உற்சாகமும், ஆர்வமும் இருக்கும். இதே வயது ஆக, ஆக பல அனுபவங்கள்/விஷயங்கள் தெரிந்து விடுகின்றன.அல்லது தெரிந்து விட்டது என்று நினைத்து கொண்டு விடுகிறோம். ஆங்கிலத்தில் "Been there. Done that." என்று கூறுவார்கள். காணும் எல்லா காட்சியும், பார்க்கும் மனிதர் அனைவரையும் பாகுபடுத்தி பார்த்தால் தான் நிம்மதியாக இருக்கிறது. "இது அன்று நடந்ததை போலல்லவா இருக்கிறது? இவர் நம் பக்கத்து வீட்டு நண்பரை போலவே நடந்து கொள்கிறாரே!" என்று எப்போதும் ஒரு பக்கம் pattern match செய்து கொண்டே எண்ண அலைகள் எழும்பி, எழும்பி தாழ்கின்றன. இந்த pattern-matching தான் நமக்கு வாழ்வில் பிரச்சினைகளை தீர்க்கவும், முடிவுகளை எடுக்கவும் உதவுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அனுபவம் கூடும் போது, இன்னும் நிறைய முன்மாதிரிகள் தெரிய வருகின்றன. அதற்கேற்றார்போல், நாம் இன்னும் பல பாகுபாடுகளை உருவாக்கி, அதற்குள் எல்லாவற்றையும் அடக்க முனைகிறோம். ஆக, எதையுமே புதுமை என்று நினைக்க விரும்பாத மனதுக்கு எப்படி புத்துணர்வு இருக்கும்? எல்லாவற்றையுமே பழைய கண்ணோட்டம், தவறுகள், திருத்தங்களால் செய்த கண்ணாடியால் பார்த்தல் எவ்விதத்தில் நல்லது? என் நண்பன் ஒருவன் கூறுவான், "Subha, you should let yourself be surprised everyday!". மிக உண்மை என்று இன்று தோன்றுகிறது. நான் இவ்வளவு கடுமையான விஷயத்தை கூற நினைத்து எழுத ஆரம்பிக்கவில்லை...:)
என்னையும், என் அவசரத்தையும் மீறி என்னை தினமும் அசத்தும் ஒரு விஷயம்: மலர்கள். அழகான, வெள்ளை மொட்டுக்களில் சிறிய நீர் முத்துக்கள் விளையாட, நறுமணம் வீசும் மல்லிகை, முல்லை, ஜாதி, ரோஜா பூக்களுக்கு என் மேல் ஒரு தனி ஆளுமையுண்டு! எவ்வளவு முறை பார்த்தாலும், சூடினாலும் எனக்கு இன்று வரை அலுத்தது கிடையாது! அதிகாலையிலும், அந்தி சாயும் நேரத்திலும் பூக்காரர்கள் மிக வேகமாக ஆனால் லாவகமாக, தாளம் தவறாமல் (ஆம் அவர்களின் அந்த பூக்கட்டும் கலையிலும் சங்கீதாம்சம் இருக்கத்தான் செய்கிறது..:))மலர்களை, அடர்த்தியான சரங்களாக கோர்க்கும் கலையே மிக அழகு. ஸ்ரீரங்கத்தின் சாத்தார வீதிதான் பூச்சந்தை. கற்பூரமும், ஊதுவத்தியும், பன்னீர் வாசனையுடனும் கலந்து வரும் பூவாசம் நாசியை துளைக்கும்! அம்மா அருகே இருக்கும் கடைகளில் காய்கறி வாங்குகையில், பூச்சந்தையில் இங்கும் அங்கும் நான்கு முறை நடந்து, வேடிக்கை பார்த்துவிட்டு வருவேன்.
அரங்கனுக்கு கோடை வெயில் தெரியாமல் இருக்க, ரங்கநாயகி சமேதராய் வசந்த மண்டபத்தில் தண்ணீருக்கு நடுவே சந்தியா வேளையில் சேவையாற்றுவார்கள். அருகேயிருக்கும் நந்தவனத்திலிருந்து துளசி மணமும், பூமணமும் கலந்து வீசும் மிக ரம்மியமான சூழல்! சில நாட்கள், கோடை மழை சற்று பூமியை நனைக்கும் நேரம், மண்வாசனையும் கலந்து மிக ஆனந்தமாக இருக்கும்! எத்தனை முறைதான் இதை ரசித்தாலும், ஒரு சிறு பிள்ளையின் கண்ணோட்டத்தோடு, புத்துணர்வுடன் நான் விரும்பும் விஷயங்களில் இதுவும் ஒன்று!
என்னையும், என் அவசரத்தையும் மீறி என்னை தினமும் அசத்தும் ஒரு விஷயம்: மலர்கள். அழகான, வெள்ளை மொட்டுக்களில் சிறிய நீர் முத்துக்கள் விளையாட, நறுமணம் வீசும் மல்லிகை, முல்லை, ஜாதி, ரோஜா பூக்களுக்கு என் மேல் ஒரு தனி ஆளுமையுண்டு! எவ்வளவு முறை பார்த்தாலும், சூடினாலும் எனக்கு இன்று வரை அலுத்தது கிடையாது! அதிகாலையிலும், அந்தி சாயும் நேரத்திலும் பூக்காரர்கள் மிக வேகமாக ஆனால் லாவகமாக, தாளம் தவறாமல் (ஆம் அவர்களின் அந்த பூக்கட்டும் கலையிலும் சங்கீதாம்சம் இருக்கத்தான் செய்கிறது..:))மலர்களை, அடர்த்தியான சரங்களாக கோர்க்கும் கலையே மிக அழகு. ஸ்ரீரங்கத்தின் சாத்தார வீதிதான் பூச்சந்தை. கற்பூரமும், ஊதுவத்தியும், பன்னீர் வாசனையுடனும் கலந்து வரும் பூவாசம் நாசியை துளைக்கும்! அம்மா அருகே இருக்கும் கடைகளில் காய்கறி வாங்குகையில், பூச்சந்தையில் இங்கும் அங்கும் நான்கு முறை நடந்து, வேடிக்கை பார்த்துவிட்டு வருவேன்.
அரங்கனுக்கு கோடை வெயில் தெரியாமல் இருக்க, ரங்கநாயகி சமேதராய் வசந்த மண்டபத்தில் தண்ணீருக்கு நடுவே சந்தியா வேளையில் சேவையாற்றுவார்கள். அருகேயிருக்கும் நந்தவனத்திலிருந்து துளசி மணமும், பூமணமும் கலந்து வீசும் மிக ரம்மியமான சூழல்! சில நாட்கள், கோடை மழை சற்று பூமியை நனைக்கும் நேரம், மண்வாசனையும் கலந்து மிக ஆனந்தமாக இருக்கும்! எத்தனை முறைதான் இதை ரசித்தாலும், ஒரு சிறு பிள்ளையின் கண்ணோட்டத்தோடு, புத்துணர்வுடன் நான் விரும்பும் விஷயங்களில் இதுவும் ஒன்று!
ஞாயிறு, அக்டோபர் 23, 2005
தர்மஸ்தலா
பல ஆண்டுகளுக்கு முன்பு கர்னாடகா டூர் சென்றோம். சுப்ரமண்யா, தர்மஸ்தலா, தலைக்காவிரி, உடிபி, மங்களூர் என்று ஒரு பெரிய பயணம். கர்னாடகாவில் என்னை முதலில் கவர்ந்தது, அடர்ந்த காடுகளும், நீர்வளமும். எல்லா ஊரிலுமே வெயில் தணிந்து, குளுமையாக இருந்ததால், தமிழ்நாட்டிலிருந்து வந்த எனக்கு பிடித்திருந்தது..:) பல வருடங்கள் முன் சென்ற ஊராதலால், நினைவில் பல விஷயங்கள் நிற்கவில்லை.
தர்மஸ்தலாவில் ஒரு சோமவாரம் சென்றிருந்தோம். ஏதோ ஒரு காரணத்தால் ஒரு சத்திரத்தில் தங்கும்படியாக நேர்ந்தது. ஹோட்ட்ல் புக்கிங்கில் ஏதோ குளறுபடியால் இப்படி ஆகியது என்று நினைக்கிறேன். "ஐயோ சத்திரமா!" என்று நாங்கள் எல்லோரும் அலுத்து கொண்டிருந்தோம். தர்ம சத்திரம் என்றாலே அது நன்றாக இருக்காது என்று ஒரு prejudice. வெறும் Prejudice என்று சொல்வதை விட, ஒரு காரணத்துடன் தான் ப்ரஜூடிஸ் என்று சொல்லலாம். சங்க காலத்தில், என்னதான் சத்திரங்கள் பயணியர்க்கு அடைக்கலம் தந்து, ராஜோபசாரம் செய்ததாக இருந்தாலும், இப்போது தமிழ்நாட்டில் அப்படி இல்லையல்லவா? ஆனால் எங்களுடன் வந்த டிரைவர், தர்மஸ்தலா சத்திரங்கள் மிக நன்றாக இருக்கும் என்று கூறி அழைத்து சென்றான். உண்மையிலேயே, மிக தூய்மையாகவும், வசதியாகவும் இருந்தது. இன்பமான அதிர்ச்சி அது.
சோமவாரம் மிக விசேஷம். நேத்ராவதி நதிக்கரையில், மரங்கள் சூழ்ந்திருக்க அமைந்திருக்கும் தீர்த்தம். அருள்மிகு மஞ்சுநாதஸ்வாமியையும், அம்மானவாருவையும், சுப்ரமண்யரையும் தரிசனம் செய்தோம். தர்மஸ்தலாவில் விசேஷம், அது ஒரு மதத்தை சார்ந்த கோவில் அல்ல. என்னதான் சிவ-சக்தி அம்சங்களாக தெய்வங்கள் அமைந்திருந்தாலும், அவை தர்ம தேவதைகளாகவே பூஜிக்கப்படுகின்றன. ஆக, அது தர்மத்துக்கும், தர்ம ரக்ஷணை செய்யும் பொதுவான கடவுளுக்கும் தான் கோவில். பல மதத்தினர், இஸ்லாமியர் உட்பட, அங்கு வழிபாடு செய்கின்றனர். தினம் வரும் பக்தர்களுக்கு எல்லாம், தேவஸ்தானம் இலவசமாக உணவளிக்கிறது. மிகவும் ருசியான, கல்யாண சாப்பாடு..:)
தர்மத்தை பற்றி பேச எனக்கு மூளையும் போதாது, வயதும் போதாது. ஆனால், ஒரு சில எண்ணங்கள் இதோ. "தர்மம்" என்ற ஒரு கருத்துக்கு ஆங்கிலத்தில் ஒரு சமமான வார்த்தை கிடையாது. இது பரதக்கண்டத்துக்கே சாசுவதமான ஒன்று. இதை மதத்தோடு கோர்ப்பதில் எனக்கு இஷ்டம் இல்லை. தர்மம் மதத்துக்கெல்லாம் அப்பார்ப்பட்டது. Duty என்பது கடமை. அது தர்மத்தின் ஒரு அங்கம் மட்டுமே. அதுவே தர்மமா? இல்லை. Obligation? சில நேரங்களில் தர்மத்தின் பொருட்டு சில obligations செய்ய நேர்ந்தாலும் அது மட்டுமே தர்மமாகாது. புண்ணியம் தேடி மற்றவர்க்கு அன்னதானமும், charity-உம் கொடுத்தால் அது தர்மமா? பலன் தேடி எதை செய்தாலும் அது தர்மமாகாது. எல்லோருக்கும் ஒரே தர்மம் என்பதும் ஒப்புக்கொள்ள முடியாதது. ஒரு சிலருக்கு, நேரத்தை பொறுத்து தான் தர்மம் விதிக்கப் படுகிறது. ஸ்ரீராமர் சீதையை தீக்குளிக்க சொன்னதும் தர்மமே. துரியனை இடுப்பின் கீழ், பீமனை அடிக்க சொன்னதும் தர்மமே. காந்தாரி, புத்திர சோகத்தில் இறையம்சமான கிருஷ்ணனை வம்சம் அழியும்படி சபித்ததும் தர்மமே.
இப்படி பல குழப்பங்கள். இதற்கு கிருஷ்ணர் கீதோபதேசமே செய்திருக்கிறார். நான் என் சொல்வது? :) என்னை பொறுத்த வரையில், நடைமுறை வாழ்க்கையில், பிறரை அனாவசியமாக மனதில் தூஷிக்காமல் இருப்பது; வஞ்சனை எண்ணம் கொள்ளாமலிருப்பது; பொறாமை படாமல் இருப்பது; அடுத்தவரை அவமதிக்காமல் இருப்பது போன்று சிறிய விஷயங்கள் கூட தர்ம சிந்தனை தான்! எவ்வளவு முறை பிறரைப் பற்றி, அவசரமாக ஒரு தவறான முடிவுக்கு வருகிறோம்? நமக்கு தான் analytical mind இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, அரைகுறை விஷயங்கள் தெரிந்து கொண்டு, எதையோ ஆராய்ந்து, மொட்டைதலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டு, பலவாறான முடிவுகளுக்கு வருகிறோம். இதுவும் அதர்மம் தான். People can never be pegged as round or square. பல மனிதர்கள் தயாரிக்கும் பொருள்களை தினசரி உபயோகம் செய்கிறோம். அதை மதிக்காமல், அனாவசியமாக வீணாக்குதலும் அதர்மம் தான்!
இதெல்லாம் நானும் கடைபிடிக்கிறேன் என்று சொல்வதற்கில்லை. முடிந்த வரை முயல்கிறேன். ஆனால் இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்ற awareness இருக்க வேண்டும். அப்போது தான், அடுத்த முறை எதாவது ஒரு எண்ணம் வரும்போது, அது நல்ல சிந்தையா, கெடுதலா என்று எண்ணி பார்க்கவாவது தோன்றும்!
விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் கடைசி மந்திரமும், சந்தியா வந்தனத்தின் கடைசி மந்திரமும்
"காயேன வாசா மனசேந்த்ரியேர்வா புத்யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத்"
என்றே ஆரம்பிக்கிறது. மனஸ், உடல், இந்திரியம், புத்தி, வாக்கு, ஆத்மா ஆகிய அனைத்தாலும் நான் செய்பவை இறைவனுக்கே சமர்ப்பணம் என்பதே பொருள். இதில் சிலவற்றையாவது கடைபிடிக்க முயல்கிறேன்.
தர்மஸ்தலாவில் ஒரு சோமவாரம் சென்றிருந்தோம். ஏதோ ஒரு காரணத்தால் ஒரு சத்திரத்தில் தங்கும்படியாக நேர்ந்தது. ஹோட்ட்ல் புக்கிங்கில் ஏதோ குளறுபடியால் இப்படி ஆகியது என்று நினைக்கிறேன். "ஐயோ சத்திரமா!" என்று நாங்கள் எல்லோரும் அலுத்து கொண்டிருந்தோம். தர்ம சத்திரம் என்றாலே அது நன்றாக இருக்காது என்று ஒரு prejudice. வெறும் Prejudice என்று சொல்வதை விட, ஒரு காரணத்துடன் தான் ப்ரஜூடிஸ் என்று சொல்லலாம். சங்க காலத்தில், என்னதான் சத்திரங்கள் பயணியர்க்கு அடைக்கலம் தந்து, ராஜோபசாரம் செய்ததாக இருந்தாலும், இப்போது தமிழ்நாட்டில் அப்படி இல்லையல்லவா? ஆனால் எங்களுடன் வந்த டிரைவர், தர்மஸ்தலா சத்திரங்கள் மிக நன்றாக இருக்கும் என்று கூறி அழைத்து சென்றான். உண்மையிலேயே, மிக தூய்மையாகவும், வசதியாகவும் இருந்தது. இன்பமான அதிர்ச்சி அது.
சோமவாரம் மிக விசேஷம். நேத்ராவதி நதிக்கரையில், மரங்கள் சூழ்ந்திருக்க அமைந்திருக்கும் தீர்த்தம். அருள்மிகு மஞ்சுநாதஸ்வாமியையும், அம்மானவாருவையும், சுப்ரமண்யரையும் தரிசனம் செய்தோம். தர்மஸ்தலாவில் விசேஷம், அது ஒரு மதத்தை சார்ந்த கோவில் அல்ல. என்னதான் சிவ-சக்தி அம்சங்களாக தெய்வங்கள் அமைந்திருந்தாலும், அவை தர்ம தேவதைகளாகவே பூஜிக்கப்படுகின்றன. ஆக, அது தர்மத்துக்கும், தர்ம ரக்ஷணை செய்யும் பொதுவான கடவுளுக்கும் தான் கோவில். பல மதத்தினர், இஸ்லாமியர் உட்பட, அங்கு வழிபாடு செய்கின்றனர். தினம் வரும் பக்தர்களுக்கு எல்லாம், தேவஸ்தானம் இலவசமாக உணவளிக்கிறது. மிகவும் ருசியான, கல்யாண சாப்பாடு..:)
தர்மத்தை பற்றி பேச எனக்கு மூளையும் போதாது, வயதும் போதாது. ஆனால், ஒரு சில எண்ணங்கள் இதோ. "தர்மம்" என்ற ஒரு கருத்துக்கு ஆங்கிலத்தில் ஒரு சமமான வார்த்தை கிடையாது. இது பரதக்கண்டத்துக்கே சாசுவதமான ஒன்று. இதை மதத்தோடு கோர்ப்பதில் எனக்கு இஷ்டம் இல்லை. தர்மம் மதத்துக்கெல்லாம் அப்பார்ப்பட்டது. Duty என்பது கடமை. அது தர்மத்தின் ஒரு அங்கம் மட்டுமே. அதுவே தர்மமா? இல்லை. Obligation? சில நேரங்களில் தர்மத்தின் பொருட்டு சில obligations செய்ய நேர்ந்தாலும் அது மட்டுமே தர்மமாகாது. புண்ணியம் தேடி மற்றவர்க்கு அன்னதானமும், charity-உம் கொடுத்தால் அது தர்மமா? பலன் தேடி எதை செய்தாலும் அது தர்மமாகாது. எல்லோருக்கும் ஒரே தர்மம் என்பதும் ஒப்புக்கொள்ள முடியாதது. ஒரு சிலருக்கு, நேரத்தை பொறுத்து தான் தர்மம் விதிக்கப் படுகிறது. ஸ்ரீராமர் சீதையை தீக்குளிக்க சொன்னதும் தர்மமே. துரியனை இடுப்பின் கீழ், பீமனை அடிக்க சொன்னதும் தர்மமே. காந்தாரி, புத்திர சோகத்தில் இறையம்சமான கிருஷ்ணனை வம்சம் அழியும்படி சபித்ததும் தர்மமே.
இப்படி பல குழப்பங்கள். இதற்கு கிருஷ்ணர் கீதோபதேசமே செய்திருக்கிறார். நான் என் சொல்வது? :) என்னை பொறுத்த வரையில், நடைமுறை வாழ்க்கையில், பிறரை அனாவசியமாக மனதில் தூஷிக்காமல் இருப்பது; வஞ்சனை எண்ணம் கொள்ளாமலிருப்பது; பொறாமை படாமல் இருப்பது; அடுத்தவரை அவமதிக்காமல் இருப்பது போன்று சிறிய விஷயங்கள் கூட தர்ம சிந்தனை தான்! எவ்வளவு முறை பிறரைப் பற்றி, அவசரமாக ஒரு தவறான முடிவுக்கு வருகிறோம்? நமக்கு தான் analytical mind இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, அரைகுறை விஷயங்கள் தெரிந்து கொண்டு, எதையோ ஆராய்ந்து, மொட்டைதலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டு, பலவாறான முடிவுகளுக்கு வருகிறோம். இதுவும் அதர்மம் தான். People can never be pegged as round or square. பல மனிதர்கள் தயாரிக்கும் பொருள்களை தினசரி உபயோகம் செய்கிறோம். அதை மதிக்காமல், அனாவசியமாக வீணாக்குதலும் அதர்மம் தான்!
இதெல்லாம் நானும் கடைபிடிக்கிறேன் என்று சொல்வதற்கில்லை. முடிந்த வரை முயல்கிறேன். ஆனால் இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்ற awareness இருக்க வேண்டும். அப்போது தான், அடுத்த முறை எதாவது ஒரு எண்ணம் வரும்போது, அது நல்ல சிந்தையா, கெடுதலா என்று எண்ணி பார்க்கவாவது தோன்றும்!
விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் கடைசி மந்திரமும், சந்தியா வந்தனத்தின் கடைசி மந்திரமும்
"காயேன வாசா மனசேந்த்ரியேர்வா புத்யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத்"
என்றே ஆரம்பிக்கிறது. மனஸ், உடல், இந்திரியம், புத்தி, வாக்கு, ஆத்மா ஆகிய அனைத்தாலும் நான் செய்பவை இறைவனுக்கே சமர்ப்பணம் என்பதே பொருள். இதில் சிலவற்றையாவது கடைபிடிக்க முயல்கிறேன்.
செவ்வாய், அக்டோபர் 18, 2005
திருப்பேர்நகர்
தமிழில் எழுதி பல மாதங்கள் ஆகிவிட்டன. இன்று ஒரு மாலை இளவெயில் நேரத்தில் இளந்தென்றல் வீச, அதற்கிசைந்து தலை சாய்த்து, சோம்பல் முறித்து மரங்கள் பலவர்ண இலைகளையுதிர்க்க, எனக்கு மறுபடியும் காவிரியாற்றங்கரையின் இளந்தென்றல் மனதில் வீசியது...
திருப்பேர் நகரான் திருமாலிரும்சோலை
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
"இருப்பேன்" அன்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதுண்டு களித்தேனே!"
- நம்மாழ்வார் திருவாய்மொழி
வைணவ §க்ஷத்திரங்களில் 'பஞ்சரங்க' §க்ஷத்திரங்களுக்கு தனி சிறப்புண்டு. பஞ்சரங்கம் எனக் கூறப்படுபவை: ஆதிரங்கம் அல்லது ஸ்ரீரங்கப்பட்டினம், அப்பாலரங்கம் அல்லது திருப்பேர்நகர், பரிமளரங்கம் அல்லது மாயவரம், ஸ்ரீரங்கம் மற்றும் சீர்காழி அருகே இருக்கும் வடரங்கம். இந்த பஞ்சரங்கத்திலும் எம்பெருமான் பள்ளிகொண்டானாக காட்சியளிக்கிறார்.
திருப்பேர் நகருக்கு கோவிலடி என்றும் பெயர். பெருமாள் அங்கு அமர்ந்து அந்த இடத்தை விட்டு பெயரேன் எனவருளியதால், திருப்பேர்நகர் என்று பெயர்க்காரணம். பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்துக்கு வாயிலாக இருப்பதனால் "கோவில் அடி" என்றும் பெயர் ஏற்ப்பட்டது. ஸ்ரீரங்கத்துக்கு அப்பால் காவிரியாற்றங்கரையின் கரையில் அமைந்திருப்பதால், 'அப்பாலரங்கம்' என்று பெயர். அன்பில் மற்றும் கோவிலடி இரண்டையுமே சேர்த்து தான் சொல்வார்கள். அன்பில் காவிரியின் திருச்சி கரையிலும், கோவிலடி காவிரியின் தஞ்சை கரையிலும் அமைந்திருக்கிறது. திருமழிசையாழ்வார் தன் பாசுரத்தில் அன்பில் மற்றும் திருப்பேர்நகரை சேர்த்து "பேரன்பில்" என்றே கூறுகிறார்.
நான் சென்ற பல கோவில்கள் போல, இதுவும் எதேச்சையாக சென்ற கோவில் தான். முதலில் சென்ற போது, அந்த தலத்தை பற்றி எதுவுமே தெரியாமல்தான் போனேன். மிக சிறிய ஊர். திருச்சியிலிருந்து சுமார் 45 நிமிட பயணம். ஆற்றங்கரையிலேயே கோவில். அழகிய, எளிமையான தஞ்சை ஜில்லா ஊர். மாலை நேரத்தில், காவிரியின் காற்று வந்து வருடிச்சென்றது. பள்ளிகொண்டப் பெருமாள் அப்பக்குடத்தான் என்று பெயர் பெற்றிருக்கிறார். இறைவனின் வலக்கையருகே ஒரு பெரிய அப்பக்குடம் இருக்கும். உபரிஸ்ரவசு என்னும் மன்னன், கிழவன் ரூபத்தில் வந்த இறைவனுக்கு அன்னமளித்தும் பசியடங்காமல் போக, விருந்து தயார் செய்யும் வேளையில், snack-ஆக அப்பங்கள் செய்து படைத்தான். அந்த அப்பக்குடத்தோடு அங்கேயே பெருமான் கமலவல்லி நாச்சியார் சமேத அப்பாலரங்கனாக அமர்ந்து விட்டதாக தலபுராணம்.
பெருமாளுக்கு தசாவதார ஒட்டியானம் மிக பிரசித்தி. 6000 வருடத்துக்கும் மேலான பழமையான கோவில் எனக் கூறுகின்றனர்! எந்தவிதமான வெப்பத்திலும் கூட, எப்பொழுதும் ஜில்லென்று காற்றை கிளப்பி பெருமாள் மனம் குளிர வைப்பாள் காவிரியன்னை என்று பட்டர் கூறினார். அதை ஆமோதிப்பதைப் போல், அப்போது ஒரு குளிர்தென்றல் கிளம்பியது.
கோவிலடியிலிருந்து பல கலை வல்லுனர்களும், ஆசார்யார்களும், அனுஷ்டானங்களில் சிறந்தவர்களும் தோன்றியதாக பேச்சு. திருச்சியில், கோவிலடி மத்வப்ரசாத் என்று ஒரு வித்வானின் கச்சேரிகள் கேட்டிருக்கிறேன். மிக பிரமாதமாக இருக்கும்! அந்த கூற்றிலும் உண்மை இருக்கத்தான் செய்யுமோ என்று என்னை யோசிக்க வைத்தது. யோசனையிலேயே, காவிரி ஆற்றின் ஓரமாக பயணம் செய்து, திருச்சியும் அடைந்து விட்டோம். இவ்வளவு நாள் இந்த ஊரைப் பற்றி தெரியவில்லையே என்று ஒரு சின்ன வருத்தம். ஆனால், இப்போதாவது, அரங்கன் அனுக்கிரகத்தில் காணக்கிடைத்ததே என்றும் ஒரு சந்தோஷம்.
'இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்து என் செய்வான்?
குன்றெனத் திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான்
ஒன்று எனக்கு அருள் செய்ய உணர்தலுற்றேனே!'
- நம்மாழ்வார் திருவாய்மொழி
(O Lord, how could you have ignored me all my life and suddenly thought it fit to enter my heart? What answer can you give except hang your head in shame like a pupil before a teacher!)
என்று முணுமுணுத்துக் கொண்டே மனதால் விடைப்பெற்றேன். மறுபடியும் வாய்ப்பு கிடைத்தால் அந்த §க்ஷத்திரம் செல்வேன்.
திருப்பேர் நகரான் திருமாலிரும்சோலை
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
"இருப்பேன்" அன்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதுண்டு களித்தேனே!"
- நம்மாழ்வார் திருவாய்மொழி
வைணவ §க்ஷத்திரங்களில் 'பஞ்சரங்க' §க்ஷத்திரங்களுக்கு தனி சிறப்புண்டு. பஞ்சரங்கம் எனக் கூறப்படுபவை: ஆதிரங்கம் அல்லது ஸ்ரீரங்கப்பட்டினம், அப்பாலரங்கம் அல்லது திருப்பேர்நகர், பரிமளரங்கம் அல்லது மாயவரம், ஸ்ரீரங்கம் மற்றும் சீர்காழி அருகே இருக்கும் வடரங்கம். இந்த பஞ்சரங்கத்திலும் எம்பெருமான் பள்ளிகொண்டானாக காட்சியளிக்கிறார்.
திருப்பேர் நகருக்கு கோவிலடி என்றும் பெயர். பெருமாள் அங்கு அமர்ந்து அந்த இடத்தை விட்டு பெயரேன் எனவருளியதால், திருப்பேர்நகர் என்று பெயர்க்காரணம். பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்துக்கு வாயிலாக இருப்பதனால் "கோவில் அடி" என்றும் பெயர் ஏற்ப்பட்டது. ஸ்ரீரங்கத்துக்கு அப்பால் காவிரியாற்றங்கரையின் கரையில் அமைந்திருப்பதால், 'அப்பாலரங்கம்' என்று பெயர். அன்பில் மற்றும் கோவிலடி இரண்டையுமே சேர்த்து தான் சொல்வார்கள். அன்பில் காவிரியின் திருச்சி கரையிலும், கோவிலடி காவிரியின் தஞ்சை கரையிலும் அமைந்திருக்கிறது. திருமழிசையாழ்வார் தன் பாசுரத்தில் அன்பில் மற்றும் திருப்பேர்நகரை சேர்த்து "பேரன்பில்" என்றே கூறுகிறார்.
நான் சென்ற பல கோவில்கள் போல, இதுவும் எதேச்சையாக சென்ற கோவில் தான். முதலில் சென்ற போது, அந்த தலத்தை பற்றி எதுவுமே தெரியாமல்தான் போனேன். மிக சிறிய ஊர். திருச்சியிலிருந்து சுமார் 45 நிமிட பயணம். ஆற்றங்கரையிலேயே கோவில். அழகிய, எளிமையான தஞ்சை ஜில்லா ஊர். மாலை நேரத்தில், காவிரியின் காற்று வந்து வருடிச்சென்றது. பள்ளிகொண்டப் பெருமாள் அப்பக்குடத்தான் என்று பெயர் பெற்றிருக்கிறார். இறைவனின் வலக்கையருகே ஒரு பெரிய அப்பக்குடம் இருக்கும். உபரிஸ்ரவசு என்னும் மன்னன், கிழவன் ரூபத்தில் வந்த இறைவனுக்கு அன்னமளித்தும் பசியடங்காமல் போக, விருந்து தயார் செய்யும் வேளையில், snack-ஆக அப்பங்கள் செய்து படைத்தான். அந்த அப்பக்குடத்தோடு அங்கேயே பெருமான் கமலவல்லி நாச்சியார் சமேத அப்பாலரங்கனாக அமர்ந்து விட்டதாக தலபுராணம்.
பெருமாளுக்கு தசாவதார ஒட்டியானம் மிக பிரசித்தி. 6000 வருடத்துக்கும் மேலான பழமையான கோவில் எனக் கூறுகின்றனர்! எந்தவிதமான வெப்பத்திலும் கூட, எப்பொழுதும் ஜில்லென்று காற்றை கிளப்பி பெருமாள் மனம் குளிர வைப்பாள் காவிரியன்னை என்று பட்டர் கூறினார். அதை ஆமோதிப்பதைப் போல், அப்போது ஒரு குளிர்தென்றல் கிளம்பியது.
கோவிலடியிலிருந்து பல கலை வல்லுனர்களும், ஆசார்யார்களும், அனுஷ்டானங்களில் சிறந்தவர்களும் தோன்றியதாக பேச்சு. திருச்சியில், கோவிலடி மத்வப்ரசாத் என்று ஒரு வித்வானின் கச்சேரிகள் கேட்டிருக்கிறேன். மிக பிரமாதமாக இருக்கும்! அந்த கூற்றிலும் உண்மை இருக்கத்தான் செய்யுமோ என்று என்னை யோசிக்க வைத்தது. யோசனையிலேயே, காவிரி ஆற்றின் ஓரமாக பயணம் செய்து, திருச்சியும் அடைந்து விட்டோம். இவ்வளவு நாள் இந்த ஊரைப் பற்றி தெரியவில்லையே என்று ஒரு சின்ன வருத்தம். ஆனால், இப்போதாவது, அரங்கன் அனுக்கிரகத்தில் காணக்கிடைத்ததே என்றும் ஒரு சந்தோஷம்.
'இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்து என் செய்வான்?
குன்றெனத் திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான்
ஒன்று எனக்கு அருள் செய்ய உணர்தலுற்றேனே!'
- நம்மாழ்வார் திருவாய்மொழி
(O Lord, how could you have ignored me all my life and suddenly thought it fit to enter my heart? What answer can you give except hang your head in shame like a pupil before a teacher!)
என்று முணுமுணுத்துக் கொண்டே மனதால் விடைப்பெற்றேன். மறுபடியும் வாய்ப்பு கிடைத்தால் அந்த §க்ஷத்திரம் செல்வேன்.
திங்கள், செப்டம்பர் 12, 2005
அண்மையில் முத்துக்குமார் இந்த இணையத்தளத்தை பரிந்துரை செய்தார். ரம்யா என்பவரின் பதிவு இது. மனதை மிகவும் பாதித்தது! கிராமத்தில் ஏழை எளியவர்களாக இருந்தாலே வாழ்க்கையில் பல துன்பங்களை சந்திக்க நேரிடும். அதுவும் பெண்ணாக இருந்தால், அன்றைய வாழ்க்கையின் பிரச்சினைகள் போதாது என்று, உடல் ரீதியான கொடுமைகள் வேறு!
தயவு செய்து படித்துப் பாருங்கள்.
தயவு செய்து படித்துப் பாருங்கள்.
ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2005
மலைக்கோட்டை (தாயும் ஆனவர்)
திருச்சி மலைக்கோட்டையை சுற்றி பல கதைகள் கேள்விப்பட்டிருக்கிறேன். 'திரிசரன்' என்ற அசுரன் இறைவனை இங்கு வழிபட்டதால் 'திரிசரபுரம்' என்று பெயர்க்காரணம் கூறுவார்கள். கைலாய மலையிலிருந்து துகளாகி மூன்று பாகங்கள் பறந்து வந்ததாகவும், அதில் ஒன்று திருச்சி மலைக்கோட்டை என்றும் கதை இருக்கிறது. மூன்று குன்றுகளில் பிள்ளையார், தாயுமானவர் மற்றும் மட்டுவார்குழலியம்மன் அருள்புரிகிறார்கள்.
ரத்னவதி என்னும் கர்ப்பிணி பெண்ணுக்கு, தாயாக காட்சியருளி பிரசவத்துக்கு உதவிபுரிந்ததால், இறைவனுக்கு "தாயும் ஆனவர்" என்று பெயர். தாயுமானவர் சந்நிதியில், கர்ப்பிணி பெண்கள் சொல்லக்கூடிய ஒரு ஸ்தோத்திரம் இருக்கிறது. பலர் வேண்டிக்கொண்டு, வாழைப்பழக் குலைகள் காணிக்கையாக கொண்டு வந்து தருவார்கள்.
தாயுமானவர் சந்நிதி மேற்கே நோக்கி இருக்கும். உறையூரில் ஆட்சிபுரிந்த சோழ மன்னன் மீது கோபம் கொண்டு, கிழக்கே நோக்கி இருந்த தாயுமானவர், மேற்கே திரும்பி விட்டதாக கதை. உறையூரில் பெரிய மணற்புயல் உருவாகி, ஊரையே அழிக்கும் நிலையில், வெக்காளியம்மன் தலையிட்டு, சிவ பெருமானின் கோபத்தை தணித்தாளாம். இன்றும் வெக்காளியம்மன் தான் ஊரின் காவல் தெய்வம். இந்த மணற்புயலுக்கு இன்னொரு காரணமும் கூறுவார்கள். அம்பிகாபதியை, சோழ மன்னன் தண்டித்ததால், புத்திர சோகம் கொண்ட கம்பன் சோழநாட்டை சபித்ததான். அதனால், பெரிய மணற்புயல் உருவாகி, வளமான உறையூரை வெற்று நிலமாக மாற்றிவிட்டதாக வரலாறு.
உறையூர் 300 கி.மு-விலிருந்தே சோழமன்னர்களின் தலைநகரம். உறையூரில் மன்னர்களின் மாளிகையிலிருந்து, மலைக்கோட்டைக்கு ஒரு சுரங்கம் இருந்ததாகவும் ஒரு கதையிருக்கிறது! பின்னர் பல்லவர்களும், பாண்டியர்களும், நாயக்கர்களும் மலைக்கோட்டைக்கு contribute செய்ததாக வரலாறு கூறுகிறது. கலா ரசிகனான மகேந்திர வர்ம பல்லவன் மலைக்கோட்டையில், அழகான சித்திரங்களும், சிற்பங்களும் அற்பணித்தது சரித்திரம். நாயக்க மன்னன் ஒருவன் தெப்பக்குளத்தையும், கோட்டையையும் கட்டினான்.
இப்படி பல சுவாரஸ்யமான கதைகள் நிறைந்த ஊர் திருச்சி. மலைக்கோட்டையின் உச்சியிலிருந்து திருச்சியை ஒரு கழுகு பார்வை பார்க்கலாம். அமைதியாக பாயும் காவிரியும், திருவரங்கத்தின் ராஜகோபுரமும், ஆனைக்கா அண்ணலின் கோபுர உச்சியும், அரியமங்கலத்தின் பசுமையான வயல்களும், மலைக்கோட்டையை சுற்றி பரபரப்பான வாழ்க்கையின் அவசரத்தையும் அந்திவானில் மறையும் சூரியனின் செங்கதிர்கள் சிவப்பு கலந்த தங்க வெளிச்சத்தில் எடுத்துக்காட்டும். மலைக்கோட்டையின் அந்த பழமையான பாறைகள் கடந்த காலத்து மன்னாதி மன்னர்களையும், வீரர்களையும், கவிகளையும், பக்தர்களையும்,அழகே உருவான வடிவு சுந்தரிகளையும் பார்த்திருக்கின்றன; மாபெரும் ராஜ்யங்களின் உயர்வையும், வீழ்ச்சியையும் கண்டிருக்கின்றன; விபீடணன், வல்லவரையன் வந்தியத்தேவன், குந்தவை நாச்சியார், மகேந்திர வர்ம பல்லவன், ராஜ ராஜன், சாரமாமுனிவர்,என்று பலர் வந்து போன சுவடுகளை தாங்கும் கதை சொல்லும் கற்கள் அவை...வருங்காலத்துக்கும் இதே கதைகளை கூறும்.
ரத்னவதி என்னும் கர்ப்பிணி பெண்ணுக்கு, தாயாக காட்சியருளி பிரசவத்துக்கு உதவிபுரிந்ததால், இறைவனுக்கு "தாயும் ஆனவர்" என்று பெயர். தாயுமானவர் சந்நிதியில், கர்ப்பிணி பெண்கள் சொல்லக்கூடிய ஒரு ஸ்தோத்திரம் இருக்கிறது. பலர் வேண்டிக்கொண்டு, வாழைப்பழக் குலைகள் காணிக்கையாக கொண்டு வந்து தருவார்கள்.
தாயுமானவர் சந்நிதி மேற்கே நோக்கி இருக்கும். உறையூரில் ஆட்சிபுரிந்த சோழ மன்னன் மீது கோபம் கொண்டு, கிழக்கே நோக்கி இருந்த தாயுமானவர், மேற்கே திரும்பி விட்டதாக கதை. உறையூரில் பெரிய மணற்புயல் உருவாகி, ஊரையே அழிக்கும் நிலையில், வெக்காளியம்மன் தலையிட்டு, சிவ பெருமானின் கோபத்தை தணித்தாளாம். இன்றும் வெக்காளியம்மன் தான் ஊரின் காவல் தெய்வம். இந்த மணற்புயலுக்கு இன்னொரு காரணமும் கூறுவார்கள். அம்பிகாபதியை, சோழ மன்னன் தண்டித்ததால், புத்திர சோகம் கொண்ட கம்பன் சோழநாட்டை சபித்ததான். அதனால், பெரிய மணற்புயல் உருவாகி, வளமான உறையூரை வெற்று நிலமாக மாற்றிவிட்டதாக வரலாறு.
உறையூர் 300 கி.மு-விலிருந்தே சோழமன்னர்களின் தலைநகரம். உறையூரில் மன்னர்களின் மாளிகையிலிருந்து, மலைக்கோட்டைக்கு ஒரு சுரங்கம் இருந்ததாகவும் ஒரு கதையிருக்கிறது! பின்னர் பல்லவர்களும், பாண்டியர்களும், நாயக்கர்களும் மலைக்கோட்டைக்கு contribute செய்ததாக வரலாறு கூறுகிறது. கலா ரசிகனான மகேந்திர வர்ம பல்லவன் மலைக்கோட்டையில், அழகான சித்திரங்களும், சிற்பங்களும் அற்பணித்தது சரித்திரம். நாயக்க மன்னன் ஒருவன் தெப்பக்குளத்தையும், கோட்டையையும் கட்டினான்.
இப்படி பல சுவாரஸ்யமான கதைகள் நிறைந்த ஊர் திருச்சி. மலைக்கோட்டையின் உச்சியிலிருந்து திருச்சியை ஒரு கழுகு பார்வை பார்க்கலாம். அமைதியாக பாயும் காவிரியும், திருவரங்கத்தின் ராஜகோபுரமும், ஆனைக்கா அண்ணலின் கோபுர உச்சியும், அரியமங்கலத்தின் பசுமையான வயல்களும், மலைக்கோட்டையை சுற்றி பரபரப்பான வாழ்க்கையின் அவசரத்தையும் அந்திவானில் மறையும் சூரியனின் செங்கதிர்கள் சிவப்பு கலந்த தங்க வெளிச்சத்தில் எடுத்துக்காட்டும். மலைக்கோட்டையின் அந்த பழமையான பாறைகள் கடந்த காலத்து மன்னாதி மன்னர்களையும், வீரர்களையும், கவிகளையும், பக்தர்களையும்,அழகே உருவான வடிவு சுந்தரிகளையும் பார்த்திருக்கின்றன; மாபெரும் ராஜ்யங்களின் உயர்வையும், வீழ்ச்சியையும் கண்டிருக்கின்றன; விபீடணன், வல்லவரையன் வந்தியத்தேவன், குந்தவை நாச்சியார், மகேந்திர வர்ம பல்லவன், ராஜ ராஜன், சாரமாமுனிவர்,என்று பலர் வந்து போன சுவடுகளை தாங்கும் கதை சொல்லும் கற்கள் அவை...வருங்காலத்துக்கும் இதே கதைகளை கூறும்.
புதன், ஆகஸ்ட் 10, 2005
மலைக்கோட்டை - 1 (ஒரு அறிமுகம்)
திருச்சியின் மிக பழமையான பகுதி மெயின்கார்டு கேட். அந்த காலத்தில், ராணி மங்கம்மா எழுப்பிய கோட்டை மதில் சுவரின் facade மட்டும் இன்னும் இருக்கிறது. திருச்சியின் பிரதான shopping area-வான மெயின்கார்டு கேட்டின் மத்தியில் மலைக்கோட்டை. இந்த தெப்பக்குளம் கோவிலின் மட்டும் தான் எப்போதுமே நிரம்ப தண்ணீருடன் நான் பார்த்திருக்கிரேன். திருச்சியின் கடுமையான வெய்யில் அந்தியில் தணியும் நேரம், தெப்பக்குளத்திலிருந்து வரும் மெல்லிய பூங்காற்று சந்தனம், ஊதுபத்தி மற்றும் பூக்களின் மணத்தையும் தன்னோடு அரவணைத்து வந்து சுகம் தரும்.
பெரிய கடை வீதியில் 'சாரத டெக்ஸ்டைல்ஸ்' மற்றும் 'கிருஷ்ணா கார்மெண்ட்ஸ்' என்று அலறும் இரு பெரிய shopping hubs நடுவில், மலைக்கோட்டையின் சிறிய வாயில். உள்ளே சென்றதும் மாணிக்க விநாயகரின் சந்நிதி. ஷாப்பிங் செய்ய வந்தவர்கள், பொழுது போகாமல் நேரத்தை கழிக்க வேண்டி உள்ளே நுழையும் வாலிபர்கள் என்று எப்போதும் கூட்டம் ததும்பும். மிக அழகான மாணிக்க விநாயகர் வெள்ளி கவசம் தரித்து, சிரித்த முகத்துடன் காட்சியளிப்பார். எப்போதும், எருக்கம்பூ மாலையும், அருகம்புல் அலங்காரமும் தரித்திருக்கும் விநாயகரை பார்த்துக் கொண்டே இருக்கலாம்! பிரகாரத்தை சுற்றி, அவ்வையின் விநாயகர் அகவலும், திருப்புகழும் சுவற்றில் பொறித்திருக்கும். இப்போது புதுப்பித்தலில், அதையெல்லாம் மறைக்கும் விதமாக வண்ணம் பூசியிருப்பது சற்று வருத்தம். நம் கோவில்கள் கருங்கற்களால் ஆனாலும், மிக அழகாகவும், கலா ரசனையுடனும் படைக்கப் பட்டவை. அதை நவீன வண்ணங்களாலும், நமது 21-ஆம் நூற்றாண்டு சாயலில் புதுப்பிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
பிள்ளையாரை தாண்டி மலைக்கோட்டை செல்லும் படிகள் ஏறவேண்டும். செங்குத்தான படிகள். ஆனால், படி கற்களை மிக நேர்த்தியாக இழைத்திருப்பார்கள் அந்த கால சிற்பிகள்! சற்று தூரம் ஏறினாலே, சிறு ஜன்னல்கள் வழியாக பொன்னியில் புறப்படும் மாலை தென்றல் அள்ளிச் செல்லும். பல நாட்கள், நானும் என்னுடைய நண்பர்களும், அந்த ஜன்னல்களுக்கு அருகே அமர்ந்து பேசியதுண்டு. இயற்கையின் அழகிய air conditioning அது! மேலே செல்லும் வழியில், ஒரு இடத்தில் இரு பக்கத்திலும் இரண்டு பெரிய சிற்ப மண்டபங்கள் வரும். முற்றிலும் கல்லிலேயே குடையப்பட்ட மண்டபங்கள். Monolithic pillars என்று கூறப்படும் ஒரே கல்லாலேயே உருவாக்கப்பட்டவை. இந்த மண்டபங்களில், மகேந்திர வர்ம பல்லவர் சுவற்றில் சித்திரம் வரைந்ததாக கூறுகிறார்கள். நான் பார்த்ததில்லை. ஆனால், சுவற்றின் சித்திரங்கள் கண்ணுக்கு தெரியாத வகையில் அழிந்து போயிருக்கின்றன. 'பார்த்திபன் கனவி' லும் இதை பற்றி ஒரு reference வரும்.
பொதுவாக விஷ்ணுவைத்தான் அழகு என்று போற்றுவார்கள். அவர்கள் அநேகமாக தாயுமானவரை பார்த்திருக்க மாட்டார்கள்!
"பொன்னார் மேனியனே புலித்தோலை அரக்கசைத்து
மின்னார் செஞ்சடை மேல் மிளிர்கொன்றை அண்¢ந்து
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே!"
என்று என்னை மறந்து பாட வைத்த சுந்தரேசன் அந்த தாயுமானசுவாமி! 5 அடிக்கும் மேல் உயரமான லிங்கம். ஆடம்பரமே இல்லாத அலங்காரம் சிவனுக்கு. ஈர வேட்டியும், வில்வ இலையும்தான் usual அலங்காரம். பிரகாரங்களில் குளிர் காற்று வீச, சஞ்சலமான மனதுக்குக் கூட அமைதியூட்டும் சூழ்நிலை. பல நாட்கள் நான் அமைதியாக ஒரு பத்து நிமிடம் வாழ்க்கையின் அவசரத்தை விட்டு அமர்ந்துவிட்டு வருவேன்.
மலைக்கோட்டை தொடரும்....
செவ்வாய், ஆகஸ்ட் 02, 2005
திருவண்ணாமலை
திருவண்ணாமலை என்றாலே அருணாசலேசுவரரும், உண்ணாமுலையம்மனும் தான் நினைவில் வருவார்கள். புகழ் பெற்ற சைவத் திருத்தலமான திருவண்ணாமலை என்ற பேரில் ஒரு வைணவத் திருத்தலமும் உண்டு.
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே 10 கி.மீ தொலைவில் உள்ளது திருவண்ணாமலை. மிக சிறிய கிராமம். பல பேருக்கு தெரியாது. ஸ்ரீவில்லிப்புத்தூரிலேயே கேட்டாலும், சிலர் தான் சரியாகக் கூறுவார்கள். என் தந்தை, மதுரையில் அலுவல் புரிந்த போது, ஒரு நண்பர் யதார்த்தமாக அழைத்து கொண்டு சென்ற கோவில். என் தந்தைக்கு மிகவும் பிடிக்க, நாங்கள் எல்லோரும் சென்றோம்.
ஒரு சிறிய குன்றின் மேல் இருக்கிறது கோவில். மிக சிறிய ஆலயம். நம் பெருமாள் வீர ஸ்ரீனிவாசன் வீரவாளுடன் தரிசனம் தருவார். திருப்பதி பெருமாளின் அச்சு அசல். மகாவிஷ்ணு அழகின் ஸ்வரூபம். ஆனால் திருப்பதியில் நாம் அருகில் சென்று ரசிக்க முடியாத அழகு, இங்கு மனதார அருகே சென்று ரசிக்கலாம்! ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கல்யாணத்துக்காக திருப்பதி பெருமாள் புறப்பட்டதாகவும், கால தாமதமாக வந்ததனால், ஸ்ரீரங்கம் செல்லாமல் இங்கேயே settle ஆகிவிட்டதாக ஐதீகம். ஆகையால், இந்த பெருமாளை பார்த்தால், திருப்பதி சென்ற பலன்.
ஒரு மார்கழி மாத காலையில், மதுரை ஜில்லாவின் இனிமையான விடிகாலை நேரத்தில், பனி விழ நாங்கள் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வித்தோம். கர்ப்பக்கிருகத்துக்கு அருகே அமர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்தமும், சுப்ரபாதமும் ஒலிக்க புன்னகை தவழும் ஸ்ரீநிவாசனை நன்றாக தரிசித்தோம். பின் நல்ல மிளகு சாத பிரசாதம் கிடைத்தது! அந்த மாதிரியான ஒரு மிளகு சாதம் நான் வேறெங்கும் உண்டதில்லை (ஸ்ரீரங்கம் உட்பட)! பின்னர் பல முறை அந்த கோவிலுக்கு சென்றாகிவிட்டது. ஸ்ரீவில்லிப்புத்தூர் செல்லும் போதெல்லாம் அங்கும் சென்றுவிட்டு வருவோம்.
மனித மனது வேலை செய்யும் வகையே விசித்திரம். ஒரு சில கோவில்கள் செல்லும் நேரம், மனதில் அமைதியும், வாழ்க்கையில் இன்பமூட்டும் விஷயங்களும் நடக்க நேரலாம். இறை நம்பிக்கையுள்ளவர்கள், அதை தெய்வச் செயல் என்பார்கள். நாத்திகர்கள்,அது சந்தர்ப்ப சூழ்நிலை என்று கூறலாம். எது எப்படியோ, அந்த சந்தோஷம் நேரும்போது நாம் எந்த இடத்தில் இருக்கிறோமோ அந்த இடத்தோடு associate செய்து விடுவோம்! அப்படிதான் எனக்கு இந்த கோவில். மதுரை ஜில்லாவின் பசுமையான கிராமங்களும், மிக அமைதியான வாழ்க்கையும் நினைவூட்டும் இந்த அழகிய திருத்தலம், என்றும் என் மனதில் இருக்கிறது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே 10 கி.மீ தொலைவில் உள்ளது திருவண்ணாமலை. மிக சிறிய கிராமம். பல பேருக்கு தெரியாது. ஸ்ரீவில்லிப்புத்தூரிலேயே கேட்டாலும், சிலர் தான் சரியாகக் கூறுவார்கள். என் தந்தை, மதுரையில் அலுவல் புரிந்த போது, ஒரு நண்பர் யதார்த்தமாக அழைத்து கொண்டு சென்ற கோவில். என் தந்தைக்கு மிகவும் பிடிக்க, நாங்கள் எல்லோரும் சென்றோம்.
ஒரு சிறிய குன்றின் மேல் இருக்கிறது கோவில். மிக சிறிய ஆலயம். நம் பெருமாள் வீர ஸ்ரீனிவாசன் வீரவாளுடன் தரிசனம் தருவார். திருப்பதி பெருமாளின் அச்சு அசல். மகாவிஷ்ணு அழகின் ஸ்வரூபம். ஆனால் திருப்பதியில் நாம் அருகில் சென்று ரசிக்க முடியாத அழகு, இங்கு மனதார அருகே சென்று ரசிக்கலாம்! ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கல்யாணத்துக்காக திருப்பதி பெருமாள் புறப்பட்டதாகவும், கால தாமதமாக வந்ததனால், ஸ்ரீரங்கம் செல்லாமல் இங்கேயே settle ஆகிவிட்டதாக ஐதீகம். ஆகையால், இந்த பெருமாளை பார்த்தால், திருப்பதி சென்ற பலன்.
ஒரு மார்கழி மாத காலையில், மதுரை ஜில்லாவின் இனிமையான விடிகாலை நேரத்தில், பனி விழ நாங்கள் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வித்தோம். கர்ப்பக்கிருகத்துக்கு அருகே அமர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்தமும், சுப்ரபாதமும் ஒலிக்க புன்னகை தவழும் ஸ்ரீநிவாசனை நன்றாக தரிசித்தோம். பின் நல்ல மிளகு சாத பிரசாதம் கிடைத்தது! அந்த மாதிரியான ஒரு மிளகு சாதம் நான் வேறெங்கும் உண்டதில்லை (ஸ்ரீரங்கம் உட்பட)! பின்னர் பல முறை அந்த கோவிலுக்கு சென்றாகிவிட்டது. ஸ்ரீவில்லிப்புத்தூர் செல்லும் போதெல்லாம் அங்கும் சென்றுவிட்டு வருவோம்.
மனித மனது வேலை செய்யும் வகையே விசித்திரம். ஒரு சில கோவில்கள் செல்லும் நேரம், மனதில் அமைதியும், வாழ்க்கையில் இன்பமூட்டும் விஷயங்களும் நடக்க நேரலாம். இறை நம்பிக்கையுள்ளவர்கள், அதை தெய்வச் செயல் என்பார்கள். நாத்திகர்கள்,அது சந்தர்ப்ப சூழ்நிலை என்று கூறலாம். எது எப்படியோ, அந்த சந்தோஷம் நேரும்போது நாம் எந்த இடத்தில் இருக்கிறோமோ அந்த இடத்தோடு associate செய்து விடுவோம்! அப்படிதான் எனக்கு இந்த கோவில். மதுரை ஜில்லாவின் பசுமையான கிராமங்களும், மிக அமைதியான வாழ்க்கையும் நினைவூட்டும் இந்த அழகிய திருத்தலம், என்றும் என் மனதில் இருக்கிறது.
ஞாயிறு, ஜூலை 10, 2005
கல்வி
இப்போது 'எல்லோருக்கும் கல்வி' என்ற கோஷம் அதிகமாக கேட்கிறது. எல்லோருக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்று அரசாங்கம் நிறைய சட்டங்கள் தீட்டுகிறது. ஏழை எளியவர்கள், கிராமத்திலிருந்து வரும் மாணவர்கள், போன்றோருக்கு படிப்பறிவு சென்றடைய வேண்டும் என்பது நோக்கம். சமீபத்தில் கூட, Common Entrance Test (CET) abolish செய்யப்பட்டது. இனிமேல் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் வைத்தே மாணவர்களுக்கு engineering கல்லூரிகளில் அனுமதி. CET-க்கு நிறைய பயிற்சி தேவையென்றும், இதில் நகர மாணாக்கர்களுக்கு ஒரு unfair advantage இருப்பதாகவும் அரசாங்கம் கருதி இந்த சட்டத்தை அமல் படுத்தியிருக்கிறார்கள். இந்த செயலுக்குப்பின் இருக்கும் எண்ணம் நல்லதுதான். ஆனால் implementation சரிதானா?
எல்லோருக்கும் கல்வி என்பது போற்ற வேண்டிய ஒரு விஷயம். ஆனால் என்ன கல்வி அவசியம்? எல்லோருக்கும் தொழில்நுட்பக் கல்வி அவசியம் தானா? அதை நோக்கியே சட்டங்கள் தீட்டுவது சரியா? கலை கல்லூரிய்¢ல் பயின்றால் மட்டம் என்கிற எண்ணம் மேலோங்கி இருக்கிற காலம் இது. எதற்கும் லாயக்கில்லாதவன் தான் கலைக் கல்லூரியில் சேறுவான் என்று மிக ஆழமாக மக்கள் மனதில் ஊறிவிட்டது. அதனால், ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ, engineering பயில்வதற்கான attitude, aptitude இருக்கிறதோ இல்லையோ, மாணவர்கள் சென்று அதில் விழுகிறார்கள். நமது பொருளாதாரமும் computer science சார்ந்த வேலைகளையே நிறைய உருவாக்குவதாலும், பலர் அதையே நாடுகின்றனர். இப்படி கட்டாயத்தால் சேர்ந்த மாணவர்கள், ஏதோ படிக்க வேண்டுமே என்று படிப்பதை நானே என் கண்கூட பார்த்திர்க்கிறேன். இதுதான் கல்வியா?
இப்படி அனைவரும் தொழில்நுட்ப கல்வி பயில வசதியாக, தரத்தை dilute செய்வது எந்த விதத்தில் நியாயம்? Knowledge is Power என்று கூறுவார்கள். அது முற்றிலும் உண்மை. அதைவிட ஆபத்தானது அறைகுறை அறிவு! Standards குறையக் குறைய, நிறைய பேர், "ஏன் நாமும் படித்தால் என்ன?" என்று சேர்ந்து கொண்டே தான் இருப்பார்கள். ஒரு வகையான கல்வி (அது தொழில்நுட்பம் மட்டுமல்ல, கலை, ஓவியம், சங்கீதம் எதுவாக இருந்தாலும் சரி) பயில வேண்டும் என்றால் அதற்கேற்ப முயற்சியும், பயிற்சியும் செய்யத்தான் வேண்டும். உழைக்காமல் வரும் எதுவும் பிரயோஜனப்படாது.
அந்த காலத்தில் குருகுலவாசம் இருந்தது. எவனோ ஒரு மனிதனுடன் இருந்து அவனுக்கு சேவை செய்வதால் எப்படி அறிவு வரும்? அது exploitation அல்லவா? என்றெல்லாம் பலர் கேட்கிறார்கள். குருவுக்கு சேவை செய்வதால், நேரிடைப் பயன் எதுவும் கிடையாது தான். ஆனால், discipline வளரும். வினயம் கற்றுக்கொள்ள முடியும். ஆசானிடம் ஒரு வித்தையை கற்று, அதை சரியான வழியில் மட்டுமே பயன்படுத்தும் மனப்பக்குவம் வரும். ஏனென்றால், அந்த வித்தையை கற்க அவன் பட்ட கஷ்டம் அந்த மாணவனுக்கு தெரியும். அதனுடைய அருமையும், பின் விளைவும் நன்றாகவே அறிவான். கஷ்டப்பட்டு நாம் சம்பாதித்த எதையும் அவ்வளவு சுலபமாக செலவழிக்க மாட்டோமல்லவா?
அந்த காலத்தில்,அந்த மனப்பக்குவம் வராத எவருக்கும் கல்வியளிக்க மாட்டார்கள். இந்நாளில், வலைதளத்தில் அனைத்துக்கும் recipe இருக்கிறது. தேங்காய் துவையல் செய்வதிலிருந்து அணு குண்டு செய்வது வரைக்கும் எல்லாமே க்ஷண நேரத்தில் நம் கையில்! இந்த instant education -ஆல் என்ன ஆகிறது? எங்கோ ஒரு மூலையில் இருக்கும் பள்ளி மாணவன், பொழுது போகாமல் எப்படி குண்டு செய்வது என்று பார்த்து, ஏதோ கோபத்தில் தனது சக மாணாக்கர்களையே கொன்று விடுகிறான்!! கோபம் கண நேரத்தில் வந்து மறையும். நிலையற்றது. அதனால் தான் கராட்டே பயில்பவர்க்கு, மனப்பயிற்சியும் கொடுப்பார்கள். இல்லாவிடில், அவர்கள் கையில் இருக்கும் சக்தி மற்றவரை அழிக்கவல்லது....
நான் கூற வருவது என்னவென்றால், நிறைய பேர் தொழில்நுட்பம் பய்¢ல ஆசைப்படுவது தவறல்ல. ஆனால் அதற்குண்டான aptitude, attitude, skills இருந்தால் மட்டுமே அதில் செல்ல வேண்டும். அந்த பட்டம் வாங்க உழைக்கவும் வேண்டும். மற்ற துறைகள் எல்லாம் மட்டம் என்று ஏன் நினைக்க வேண்டும்? Engineering படிப்பவன் எந்த விதத்தில் உயர்ந்தவன்? கலைக் கல்லூரியில் படிப்பவன் எந்த விதத்தில் தாழ்ந்தவன்? எல்லோரும் எஞ்சினியராகவோ, டாக்டராகவோ போய்விட்டால், மற்ற தொழில்கள் அழிந்து விடுமல்லவா?
கிராமத்தில் இருப்போருக்கு, CET பாஸ் செய்யும் வசதி செய்து கொடுப்பது நியாயம், விவேகம். அதை விட்டுவிட்டு, தற்காலிக பயன் தரும் காரியங்களை செய்வது ஒரு vision இல்லாமல் செய்யும் காரியம்.
எல்லோருக்கும் கல்வி என்பது போற்ற வேண்டிய ஒரு விஷயம். ஆனால் என்ன கல்வி அவசியம்? எல்லோருக்கும் தொழில்நுட்பக் கல்வி அவசியம் தானா? அதை நோக்கியே சட்டங்கள் தீட்டுவது சரியா? கலை கல்லூரிய்¢ல் பயின்றால் மட்டம் என்கிற எண்ணம் மேலோங்கி இருக்கிற காலம் இது. எதற்கும் லாயக்கில்லாதவன் தான் கலைக் கல்லூரியில் சேறுவான் என்று மிக ஆழமாக மக்கள் மனதில் ஊறிவிட்டது. அதனால், ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ, engineering பயில்வதற்கான attitude, aptitude இருக்கிறதோ இல்லையோ, மாணவர்கள் சென்று அதில் விழுகிறார்கள். நமது பொருளாதாரமும் computer science சார்ந்த வேலைகளையே நிறைய உருவாக்குவதாலும், பலர் அதையே நாடுகின்றனர். இப்படி கட்டாயத்தால் சேர்ந்த மாணவர்கள், ஏதோ படிக்க வேண்டுமே என்று படிப்பதை நானே என் கண்கூட பார்த்திர்க்கிறேன். இதுதான் கல்வியா?
இப்படி அனைவரும் தொழில்நுட்ப கல்வி பயில வசதியாக, தரத்தை dilute செய்வது எந்த விதத்தில் நியாயம்? Knowledge is Power என்று கூறுவார்கள். அது முற்றிலும் உண்மை. அதைவிட ஆபத்தானது அறைகுறை அறிவு! Standards குறையக் குறைய, நிறைய பேர், "ஏன் நாமும் படித்தால் என்ன?" என்று சேர்ந்து கொண்டே தான் இருப்பார்கள். ஒரு வகையான கல்வி (அது தொழில்நுட்பம் மட்டுமல்ல, கலை, ஓவியம், சங்கீதம் எதுவாக இருந்தாலும் சரி) பயில வேண்டும் என்றால் அதற்கேற்ப முயற்சியும், பயிற்சியும் செய்யத்தான் வேண்டும். உழைக்காமல் வரும் எதுவும் பிரயோஜனப்படாது.
அந்த காலத்தில் குருகுலவாசம் இருந்தது. எவனோ ஒரு மனிதனுடன் இருந்து அவனுக்கு சேவை செய்வதால் எப்படி அறிவு வரும்? அது exploitation அல்லவா? என்றெல்லாம் பலர் கேட்கிறார்கள். குருவுக்கு சேவை செய்வதால், நேரிடைப் பயன் எதுவும் கிடையாது தான். ஆனால், discipline வளரும். வினயம் கற்றுக்கொள்ள முடியும். ஆசானிடம் ஒரு வித்தையை கற்று, அதை சரியான வழியில் மட்டுமே பயன்படுத்தும் மனப்பக்குவம் வரும். ஏனென்றால், அந்த வித்தையை கற்க அவன் பட்ட கஷ்டம் அந்த மாணவனுக்கு தெரியும். அதனுடைய அருமையும், பின் விளைவும் நன்றாகவே அறிவான். கஷ்டப்பட்டு நாம் சம்பாதித்த எதையும் அவ்வளவு சுலபமாக செலவழிக்க மாட்டோமல்லவா?
அந்த காலத்தில்,அந்த மனப்பக்குவம் வராத எவருக்கும் கல்வியளிக்க மாட்டார்கள். இந்நாளில், வலைதளத்தில் அனைத்துக்கும் recipe இருக்கிறது. தேங்காய் துவையல் செய்வதிலிருந்து அணு குண்டு செய்வது வரைக்கும் எல்லாமே க்ஷண நேரத்தில் நம் கையில்! இந்த instant education -ஆல் என்ன ஆகிறது? எங்கோ ஒரு மூலையில் இருக்கும் பள்ளி மாணவன், பொழுது போகாமல் எப்படி குண்டு செய்வது என்று பார்த்து, ஏதோ கோபத்தில் தனது சக மாணாக்கர்களையே கொன்று விடுகிறான்!! கோபம் கண நேரத்தில் வந்து மறையும். நிலையற்றது. அதனால் தான் கராட்டே பயில்பவர்க்கு, மனப்பயிற்சியும் கொடுப்பார்கள். இல்லாவிடில், அவர்கள் கையில் இருக்கும் சக்தி மற்றவரை அழிக்கவல்லது....
நான் கூற வருவது என்னவென்றால், நிறைய பேர் தொழில்நுட்பம் பய்¢ல ஆசைப்படுவது தவறல்ல. ஆனால் அதற்குண்டான aptitude, attitude, skills இருந்தால் மட்டுமே அதில் செல்ல வேண்டும். அந்த பட்டம் வாங்க உழைக்கவும் வேண்டும். மற்ற துறைகள் எல்லாம் மட்டம் என்று ஏன் நினைக்க வேண்டும்? Engineering படிப்பவன் எந்த விதத்தில் உயர்ந்தவன்? கலைக் கல்லூரியில் படிப்பவன் எந்த விதத்தில் தாழ்ந்தவன்? எல்லோரும் எஞ்சினியராகவோ, டாக்டராகவோ போய்விட்டால், மற்ற தொழில்கள் அழிந்து விடுமல்லவா?
கிராமத்தில் இருப்போருக்கு, CET பாஸ் செய்யும் வசதி செய்து கொடுப்பது நியாயம், விவேகம். அதை விட்டுவிட்டு, தற்காலிக பயன் தரும் காரியங்களை செய்வது ஒரு vision இல்லாமல் செய்யும் காரியம்.
செவ்வாய், ஜூன் 28, 2005
அகிலாண்டேசுவரி (திருவானைக்காவல்-2)
வெகுவாக, பல சைவ §க்ஷத்ரங்களில், இறைவன் பெயரைச் சொல்லித்தான் கோவிலை அழைப்பார்கள். "நடராஜாவை பார்த்து விட்டு வரேன்", "கபாலீசுவரர் கோவில் போய்ட்டு வரேன்" என்று தான் பெரும்பாலும் கூறுவார்கள். மதுரையில் மட்டும் தான் "மீனாட்சி அம்மன் கோவில் போயிருந்தேன்" என்று கூறுவார்கள். திருவானைக்காவலிலும், ஜம்புகேசுவரருக்கு சமமான மரியாதை அம்பாள் அகிலாண்டேசுவரிக்கும். திருச்சியில் தடுக்கி விழுந்தால் ஒரு அகிலா-வை பார்க்கலாம்.
அம்பாள் மிக அழகு! அதுவும், அர்த்த ஜாம பூஜைக்கு அலங்கரிக்கப்பட்ட அகிலாண்டேசுவரியை பார்த்துக் கொண்டே இருக்கலாம்! அவ்வளவு களை, அழகு, கம்பீரம். அகிலாண்டேசுவரி மிக உக்ரமான அம்பாள் என்றே கூறுவார்கள். நடு இரவில், சலங்கை ஒலி 'ஜல் ஜல்' என ஒலிக்க, அவள் கோவில் பிரகாரங்களை வலம் வருவதாக ஐதீகம்; அப்போது அருகாமையில் இருக்கும் அக்ரஹாரத்து மக்கள் திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்தால், அம்பாள் உக்ரம் தாங்காமல் அப்படியே பொசுங்கி சாம்பலாக போய்விட்டதாகவும் இன்னமும் கூறுகின்றனர்!
இதை வைத்து, அம்பாள் கருணையில்லாதவளா என்று பலர் கேட்கலாம். கீதையில் அர்ஜூனனுக்கு விச்வரூப தரிசனம் கண்ணன் காண்பித்த போது, அது வரையில் அதை காணத் துடித்துக் கொண்டிருந்த பார்த்தன், அந்த ரூபத்தின் தேஜசும், உக்ரமும் காண சகிக்காமல், மறுபடியும் மனித உருவத்தை கொள்ள வேண்டி கண்ணனை மன்றாடவில்லையா? அதே போல் தான், அகிலாண்டேசுவரியின் உக்ரமும் அசக்தர்களான மனிதர்களை தாக்கியது. என்றுமே உண்மையைக் எதிர்கொள்ள தெம்பு ஜாஸ்தி வேண்டும். ஆதி சங்கரர், அப்பாவ்¢ ஜனங்களை காப்பதற்காக, அவள் உக்ரத்தை தணிக்க இறைவ்¢க்கு தாடகம் செய்து அணிவித்தார். இன்றும், அகிலாண்டேசுவரியின் அழகிய காதுகளில் அதைக் காணலாம். மேலும், அவளை குளிர்விக்க அவளது பெரிய பிள்ளையான வினாயகரை அவள் சந்நிதானத்துக்கு முன்பாக ப்ரதிஷ்டை செய்தார். தன் செல்லப் பிள்ளையை பார்த்துக் கொண்டே அவளும், சிரிப்புடன் பக்தர்களுக்கு, இன்றும் அருள் புரிகிறாள்.
அம்பாள் மிக அழகு! அதுவும், அர்த்த ஜாம பூஜைக்கு அலங்கரிக்கப்பட்ட அகிலாண்டேசுவரியை பார்த்துக் கொண்டே இருக்கலாம்! அவ்வளவு களை, அழகு, கம்பீரம். அகிலாண்டேசுவரி மிக உக்ரமான அம்பாள் என்றே கூறுவார்கள். நடு இரவில், சலங்கை ஒலி 'ஜல் ஜல்' என ஒலிக்க, அவள் கோவில் பிரகாரங்களை வலம் வருவதாக ஐதீகம்; அப்போது அருகாமையில் இருக்கும் அக்ரஹாரத்து மக்கள் திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்தால், அம்பாள் உக்ரம் தாங்காமல் அப்படியே பொசுங்கி சாம்பலாக போய்விட்டதாகவும் இன்னமும் கூறுகின்றனர்!
இதை வைத்து, அம்பாள் கருணையில்லாதவளா என்று பலர் கேட்கலாம். கீதையில் அர்ஜூனனுக்கு விச்வரூப தரிசனம் கண்ணன் காண்பித்த போது, அது வரையில் அதை காணத் துடித்துக் கொண்டிருந்த பார்த்தன், அந்த ரூபத்தின் தேஜசும், உக்ரமும் காண சகிக்காமல், மறுபடியும் மனித உருவத்தை கொள்ள வேண்டி கண்ணனை மன்றாடவில்லையா? அதே போல் தான், அகிலாண்டேசுவரியின் உக்ரமும் அசக்தர்களான மனிதர்களை தாக்கியது. என்றுமே உண்மையைக் எதிர்கொள்ள தெம்பு ஜாஸ்தி வேண்டும். ஆதி சங்கரர், அப்பாவ்¢ ஜனங்களை காப்பதற்காக, அவள் உக்ரத்தை தணிக்க இறைவ்¢க்கு தாடகம் செய்து அணிவித்தார். இன்றும், அகிலாண்டேசுவரியின் அழகிய காதுகளில் அதைக் காணலாம். மேலும், அவளை குளிர்விக்க அவளது பெரிய பிள்ளையான வினாயகரை அவள் சந்நிதானத்துக்கு முன்பாக ப்ரதிஷ்டை செய்தார். தன் செல்லப் பிள்ளையை பார்த்துக் கொண்டே அவளும், சிரிப்புடன் பக்தர்களுக்கு, இன்றும் அருள் புரிகிறாள்.
புதன், ஜூன் 15, 2005
காவியங்களும் கற்பனையும்
மேற்கத்திய கலாசாரங்கள் நம் நாட்டை மட்டம் தட்டும் ஒரு விஷயம் என்னவென்றால் நமதுள்களும் நம்பும்படியாக இல்லாமல் மிக exaggerated-ஆக இருக்கின்றன. அதனால் நமது mythology வெறும் கட்டுக்கதை என்றும், நாம் மூட நம்பிக்கைக்காரர்கள், நமக்கு civilization தேவை என்றும் பல மேலைநாட்டவர்கள் முடிவு செய்து விடுகின்றனர். இந்த நினைப்பு தான்
ஆங்கிலேயர்களை 400 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்ய வைத்தது. அவர்கள் அப்படி நினைத்தது போதாது என்று, இந்தியர்களுக்கும் ஒரு inferiority complex கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர்! History is written by conquerors என்பது மிக உண்மை!
பொதுவாக, பல கடவுள்களை பூஜிக்கும் கலாசாரங்களை heathen civilizations என்று கூறுவர். அந்த கால யவனர்களும், ரோமர்களும் heathens என்று கூறப்படுவர். இங்கிலாந்தில், Angles, Saxons, Jutes என்ற tribes-ஆல் overrun ஆகும்முன், இருந்தவர்கள் 'celts'. இவர்களும்இயற்கையை கடவுளாக நினைத்தவர்கள். ஒரு Pantheon of Gods பூஜித்தவர்கள் தான் (ரோமில்இன்னமும் Pantheon என்ற மிக ·பேமஸ் சின்னம் இருக்கிறது). இவர்களுக்கும் `heathens என்று பட்டம் சூட்டி, புதிதாக வந்த படைகள் இவர்களை துரத்தி அடித்துவிட்டார்கள். இவர்கள் Wales மற்றும் Scotland மலை பகுதிகளில் சென்று ஒளிந்தனர். அவர்கள் கலாசாரம் அப்படியே mainstream- ல் assimilate ஆகிவிட்டது.
காலப் போக்கில் heathen என்கிற வார்த்தையே மிக derogatory ஆக மாறிவிட்டது. மிக சமீபத்தில் உருவான இரண்டு பெரிய மதங்கள், கிறித்துவமும், இஸ்லாமும் monotheistic மதங்கள். மிக வேகமாக பரவிய மதங்கள். அவ்வளவாக rituals-ல் பிடிப்பில்லாத மதங்கள். Due to a quirk of fate and history, இந்த இரண்டு மதத்தை சார்ந்த நாட்டவர்தான் பெரிய empires ஸ்தாபித்தார்கள். இவர்கள் கொள்கையை சாராதவர்கள், மற்ற புரியாத கலாசாரங்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள்,ஹீத்தன்ஸ் ஆகிவிட்டனர், நாம் உட்பட!
உண்மையில், கதைகளும், காவியங்களும் மிக ஆழமானவை. அந்த அந்த காலகட்டத்தில், அந்த அந்த மக்களுக்கும், சூழ்நிலைக்கும் ஏற்றாற்போல் உருவானவை தான் கலாசாரங்கள். ஆனால்எதையுமே நாம் literal-ஆக எடுத்து கொள்ள கூடாது, நம் கதைகள் உட்பட. நம் முன்னோர்கள், சில கருத்துக்களை எடுத்து சொல்வதற்காக, பல layers-ல் ஒரு விஷயத்தை சொல்வார்கள். படிக்கிறவன் எந்த லெவலில் இருந்தாலும், கதை அப்பீலிங்காக இருக்கும். மகாபாரதத்தில்திரொளபதிக்கு ஐந்து கணவர்கள். அதை literal-ஆக எடுத்து கொள்ளலாம். அல்லது பார்த்தல், கேட்டல், மொழிதல், ஸ்பரிச உணர்தல், நுகர்தல் ஆகிய ஐம்புலங்களும், மனசுக்கு அடங்கி, ஒற்றுமையாக செயல்பட்டால், வெற்றி என்றும் நம்மை பற்றியிருக்கும் என்று philosophical-ஆக எடுத்து கொள்ளலாம்.
அதே போல் தான் பிள்ளையார் சுவாமியும். மேலைநாட்டவர்கள், பிள்ளையார் படங்களை பார்த்து, "என்னடா, இவர்கள் ஏதோ நான்கு கையும், யானை மூஞ்சியும், மனித உடலுமாக எதையோ ஒரு mutant உருவத்தை போய் கடவுளாக வழிபடுகிறார்களே!" என்று நினைப்பார்கள். ஆனால் அதே mutants பற்றி X-men I, X-men II, Cat Woman, Batman என்றெல்லாம் இவர்களே படம் எடுத்தால்
அது மட்டும் எப்படியோ 'uncivilized' கிடையாது. அதை போய் பார்ப்பார்கள். அந்த characters எல்லாம் வேறு மிக ·பேவரிட்ஸாக போய்விடும்! பிள்ளையாரின் உடலமைப்புக்கு பல கதைகள் உண்டு. அவர் முகமும், தும்பிக்கையும் 'ஓம்' என்ற ப்ரணவ மந்திர தத்துவத்தை எடுத்து சொல்வதாக இருக்கும். அவர், ஞானத்துக்கு எல்லாம் ஆதாரமான பிரணவ மந்திரமே உருவான குழந்தை சுவாமி
என்பதைக் கூறத்தான் அந்த உடல்-முக வடிவம்!
உலகின் பல அதிசயங்களில், பண்டைய கிரேக்கர், ரோமர், எகிப்தர்களின் படைப்புகள் தான் இன்னமும் புகழ் பெற்றவை. அவர்கள் அவ்வளவு uncivilized என்றால் அவ்வளவு உயர்ந்த படைப்புகள் உருவாக்குதல் சாத்தியமோ?! Posterity will decide.
ஆங்கிலேயர்களை 400 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்ய வைத்தது. அவர்கள் அப்படி நினைத்தது போதாது என்று, இந்தியர்களுக்கும் ஒரு inferiority complex கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர்! History is written by conquerors என்பது மிக உண்மை!
பொதுவாக, பல கடவுள்களை பூஜிக்கும் கலாசாரங்களை heathen civilizations என்று கூறுவர். அந்த கால யவனர்களும், ரோமர்களும் heathens என்று கூறப்படுவர். இங்கிலாந்தில், Angles, Saxons, Jutes என்ற tribes-ஆல் overrun ஆகும்முன், இருந்தவர்கள் 'celts'. இவர்களும்இயற்கையை கடவுளாக நினைத்தவர்கள். ஒரு Pantheon of Gods பூஜித்தவர்கள் தான் (ரோமில்இன்னமும் Pantheon என்ற மிக ·பேமஸ் சின்னம் இருக்கிறது). இவர்களுக்கும் `heathens என்று பட்டம் சூட்டி, புதிதாக வந்த படைகள் இவர்களை துரத்தி அடித்துவிட்டார்கள். இவர்கள் Wales மற்றும் Scotland மலை பகுதிகளில் சென்று ஒளிந்தனர். அவர்கள் கலாசாரம் அப்படியே mainstream- ல் assimilate ஆகிவிட்டது.
காலப் போக்கில் heathen என்கிற வார்த்தையே மிக derogatory ஆக மாறிவிட்டது. மிக சமீபத்தில் உருவான இரண்டு பெரிய மதங்கள், கிறித்துவமும், இஸ்லாமும் monotheistic மதங்கள். மிக வேகமாக பரவிய மதங்கள். அவ்வளவாக rituals-ல் பிடிப்பில்லாத மதங்கள். Due to a quirk of fate and history, இந்த இரண்டு மதத்தை சார்ந்த நாட்டவர்தான் பெரிய empires ஸ்தாபித்தார்கள். இவர்கள் கொள்கையை சாராதவர்கள், மற்ற புரியாத கலாசாரங்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள்,ஹீத்தன்ஸ் ஆகிவிட்டனர், நாம் உட்பட!
உண்மையில், கதைகளும், காவியங்களும் மிக ஆழமானவை. அந்த அந்த காலகட்டத்தில், அந்த அந்த மக்களுக்கும், சூழ்நிலைக்கும் ஏற்றாற்போல் உருவானவை தான் கலாசாரங்கள். ஆனால்எதையுமே நாம் literal-ஆக எடுத்து கொள்ள கூடாது, நம் கதைகள் உட்பட. நம் முன்னோர்கள், சில கருத்துக்களை எடுத்து சொல்வதற்காக, பல layers-ல் ஒரு விஷயத்தை சொல்வார்கள். படிக்கிறவன் எந்த லெவலில் இருந்தாலும், கதை அப்பீலிங்காக இருக்கும். மகாபாரதத்தில்திரொளபதிக்கு ஐந்து கணவர்கள். அதை literal-ஆக எடுத்து கொள்ளலாம். அல்லது பார்த்தல், கேட்டல், மொழிதல், ஸ்பரிச உணர்தல், நுகர்தல் ஆகிய ஐம்புலங்களும், மனசுக்கு அடங்கி, ஒற்றுமையாக செயல்பட்டால், வெற்றி என்றும் நம்மை பற்றியிருக்கும் என்று philosophical-ஆக எடுத்து கொள்ளலாம்.
அதே போல் தான் பிள்ளையார் சுவாமியும். மேலைநாட்டவர்கள், பிள்ளையார் படங்களை பார்த்து, "என்னடா, இவர்கள் ஏதோ நான்கு கையும், யானை மூஞ்சியும், மனித உடலுமாக எதையோ ஒரு mutant உருவத்தை போய் கடவுளாக வழிபடுகிறார்களே!" என்று நினைப்பார்கள். ஆனால் அதே mutants பற்றி X-men I, X-men II, Cat Woman, Batman என்றெல்லாம் இவர்களே படம் எடுத்தால்
அது மட்டும் எப்படியோ 'uncivilized' கிடையாது. அதை போய் பார்ப்பார்கள். அந்த characters எல்லாம் வேறு மிக ·பேவரிட்ஸாக போய்விடும்! பிள்ளையாரின் உடலமைப்புக்கு பல கதைகள் உண்டு. அவர் முகமும், தும்பிக்கையும் 'ஓம்' என்ற ப்ரணவ மந்திர தத்துவத்தை எடுத்து சொல்வதாக இருக்கும். அவர், ஞானத்துக்கு எல்லாம் ஆதாரமான பிரணவ மந்திரமே உருவான குழந்தை சுவாமி
என்பதைக் கூறத்தான் அந்த உடல்-முக வடிவம்!
உலகின் பல அதிசயங்களில், பண்டைய கிரேக்கர், ரோமர், எகிப்தர்களின் படைப்புகள் தான் இன்னமும் புகழ் பெற்றவை. அவர்கள் அவ்வளவு uncivilized என்றால் அவ்வளவு உயர்ந்த படைப்புகள் உருவாக்குதல் சாத்தியமோ?! Posterity will decide.
சனி, ஜூன் 11, 2005
ஆனைக்கா அண்ணல் (திருவானைக்காவல்-1)
திருச்சியிலிருந்து பெரம்பலூர் செல்கையில் ஒரு வேடிக்கையான சம்பவம். பேருந்து ஸ்ரீரங்கமும் திருவானைக்காவலும் தாண்டிதான் பெரம்பலூர் செல்லும். ஒரு வயோதிகர் என்னுடன் ஸ்ரீரங்கத்தில் ஏறினார். நெற்றியில் பளிச்சென்று ஸ்ரீசூர்ணம் (நாமம்) தரித்திருந்தார். காதில் கடுக்கன், குடுமி என்று மிக கம்பீரமாக இருந்தார். திருவானைக்காவலை பேருந்து கடந்தபோது ஜம்புகேசுவரர்-அகிலாண்டேசுவரி ஆலய கோபுரம் தென்பட்டது. உடனே "ரங்கா ரங்கா" என்று கன்னத்தில் போட்டுக்கொண்டு முகத்தை சுளித்து, வேறு பக்கம் திரும்பிவிட்டார்! அதாவது வீர வைஷ்ணவரான அவர் சிவன் கோவில் கோபுரத்தை பார்த்தால் கூட பாவமாம்! "ஹரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயில மண்ணு" என்று அறியாதவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்! வைணவர்கள் எல்லோரும் இப்படித்தான் என்று நான் சொல்லவில்லை. சைவர்கள் மிக tolerant என்றும் கூற வரவில்லை. Belief என்ற விஷயம் வருகிற போது, என்னதான் படித்திருந்தாலும், அனுபவஸ்தராயிருந்தாலும் மனிதர்கள் எப்படி மாறுகின்றனர்! ஆனால் எல்லா தெய்வமும் ஒரே பரம்பொருள் தான் என்று அறியாத வாழ்வும், படிப்பும் எதற்கு பிரயோஜனம்?! இது சிவ-விஷ்ணு அபேதத்துக்க்கு மட்டும் கூறவில்லை. ஜீஸஸ், அல்லா அனைத்து தெய்வங்களுக்கும், மதத்தினருக்கும் common.
திருவானைக்காவல் ஸ்ரீரங்கத்துக்கு 1 கி.மி தூரத்தில் உள்ளது. ஸ்ரீரங்கத்தின் காந்தி ரோடு வழியாக சென்றால் நேரே திருவானைக்காவல் சென்று விடலாம். இவ்வளவு அருகாமையில் இருந்தாலும், கோவில் styles, சுற்று சூழல், வழிபாட்டு கலாசாரம் எல்லாமே மிக வித்தியாசம்! ஸ்ரீரங்கத்தில் துளசி வாசனை தூக்கும் என்றால், திருவானைக்கா நுழையும் போதே, ரோஜா புஷ்பமாலை வாசனையும், பன்னீர் மணமும், கற்பூற வாசனையும், சுத்தமான திருநீர் மணமும் ஆளை தூக்கியடிக்கும். உள்ளே நுழையும் போதே "சிவ சிவ" மந்திரம் வரவேற்கும். கோவிலே அமைதியாக, ரம்மியமாக இருக்கும். ஸ்ரீரங்கத்தின் கூட்டத்தில் கால்வாசி கூட இருக்காது. இறைவனை நிம்மதியாக தரிசிக்கலாம்.
மிக பிரம்மாண்டமான கோவில். அகன்ற, சிற்பம் நிறைந்த மண்டபங்களும், விசலாமான பிரகாரங்களுமாக பக்தர்களை ஜம்புகேசுவரர் வரவேற்பார். ஒரு முறை வேதங்களை இறைவன், பார்வதிக்கு விளக்க ஆரம்பித்தார். பல யுகங்கள் ஆகியும், இறைவன் தன் பாட்டுக்கு, வேத சாரத்தை கூறிக் கொண்டே போக, தேவி கண்ணயர்ந்து விட்டாளாம். அதை கண்டு சினம் கொண்ட சிவ பெருமான், பார்வதியை சபித்து பூமிக்கு அனுப்பிவிட்டார். காவிரி கரைகளில் தான் ஞானம் வளரும் என்று நினைத்த பார்வதியன்னை, திருச்சியில் வந்து கடுந்தவம் செய்தாள். இறைவனும் ஞான ஸ்வரூபியான அம்பாளை மன்னித்து தன்னுடன் சேர்த்து கொண்டார். நீராலேயே லிங்கம் செய்து இறைவனை வழிபட்டதால், அது அப்பு லிங்கம் என்று அழைக்கப்படும். வைணவத்தில் எப்படி 108 திவ்யதேசங்களோ, அப்படி சைவத்தில் பஞ்சபூத தலங்கள். அதில் திருவானைக்கா அப்பு (water) ஸ்தலம்.
ஜம்புகேசுவரர் கர்ப்பக்ரஹத்துக்குள், அடியில் காவிரி ஓடிக்கொண்டிருப்பாள். எப்பொழுதும் நீரிலேயே நனைந்து கொண்டிருப்பார் ஜம்புகேசுவரர். ஜம்புகேசுவரரை 9 ஜன்னல்கள் வழியாக பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால் 9 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைப்பதாக ஐதீகம். நாகலிங்க மலர் வாசமும், வில்வமும், மல்லிகை மணமும் சூழும் அழகான சந்நிதானம்...சாயங்கால வேளைகளில், சிலர் வந்து தேவாரமும், திருவாசகமும், திருப்புகழும் அருமையாக ராகத்துடன் பாடிக்கொண்டிருப்பார்கள்.
"தோடுடைய செவியன் விடமுண்ட கண்டன்
மாசில் நல் வீணை தடவி..."
பாடலை ஒருவர் பாடிக்கேட்டு உடல் சிலிர்த்திருக்கிறேன்!
எனக்கு திருவாசகமும், தேவாரமும் ராகத்துடன் கற்று கொள்ள வேண்டும் என்று ஆசை. இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி சீக்கிரம் கேட்க ஆவல்...
திருவானைக்காவல் ஸ்ரீரங்கத்துக்கு 1 கி.மி தூரத்தில் உள்ளது. ஸ்ரீரங்கத்தின் காந்தி ரோடு வழியாக சென்றால் நேரே திருவானைக்காவல் சென்று விடலாம். இவ்வளவு அருகாமையில் இருந்தாலும், கோவில் styles, சுற்று சூழல், வழிபாட்டு கலாசாரம் எல்லாமே மிக வித்தியாசம்! ஸ்ரீரங்கத்தில் துளசி வாசனை தூக்கும் என்றால், திருவானைக்கா நுழையும் போதே, ரோஜா புஷ்பமாலை வாசனையும், பன்னீர் மணமும், கற்பூற வாசனையும், சுத்தமான திருநீர் மணமும் ஆளை தூக்கியடிக்கும். உள்ளே நுழையும் போதே "சிவ சிவ" மந்திரம் வரவேற்கும். கோவிலே அமைதியாக, ரம்மியமாக இருக்கும். ஸ்ரீரங்கத்தின் கூட்டத்தில் கால்வாசி கூட இருக்காது. இறைவனை நிம்மதியாக தரிசிக்கலாம்.
மிக பிரம்மாண்டமான கோவில். அகன்ற, சிற்பம் நிறைந்த மண்டபங்களும், விசலாமான பிரகாரங்களுமாக பக்தர்களை ஜம்புகேசுவரர் வரவேற்பார். ஒரு முறை வேதங்களை இறைவன், பார்வதிக்கு விளக்க ஆரம்பித்தார். பல யுகங்கள் ஆகியும், இறைவன் தன் பாட்டுக்கு, வேத சாரத்தை கூறிக் கொண்டே போக, தேவி கண்ணயர்ந்து விட்டாளாம். அதை கண்டு சினம் கொண்ட சிவ பெருமான், பார்வதியை சபித்து பூமிக்கு அனுப்பிவிட்டார். காவிரி கரைகளில் தான் ஞானம் வளரும் என்று நினைத்த பார்வதியன்னை, திருச்சியில் வந்து கடுந்தவம் செய்தாள். இறைவனும் ஞான ஸ்வரூபியான அம்பாளை மன்னித்து தன்னுடன் சேர்த்து கொண்டார். நீராலேயே லிங்கம் செய்து இறைவனை வழிபட்டதால், அது அப்பு லிங்கம் என்று அழைக்கப்படும். வைணவத்தில் எப்படி 108 திவ்யதேசங்களோ, அப்படி சைவத்தில் பஞ்சபூத தலங்கள். அதில் திருவானைக்கா அப்பு (water) ஸ்தலம்.
ஜம்புகேசுவரர் கர்ப்பக்ரஹத்துக்குள், அடியில் காவிரி ஓடிக்கொண்டிருப்பாள். எப்பொழுதும் நீரிலேயே நனைந்து கொண்டிருப்பார் ஜம்புகேசுவரர். ஜம்புகேசுவரரை 9 ஜன்னல்கள் வழியாக பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால் 9 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைப்பதாக ஐதீகம். நாகலிங்க மலர் வாசமும், வில்வமும், மல்லிகை மணமும் சூழும் அழகான சந்நிதானம்...சாயங்கால வேளைகளில், சிலர் வந்து தேவாரமும், திருவாசகமும், திருப்புகழும் அருமையாக ராகத்துடன் பாடிக்கொண்டிருப்பார்கள்.
"தோடுடைய செவியன் விடமுண்ட கண்டன்
மாசில் நல் வீணை தடவி..."
பாடலை ஒருவர் பாடிக்கேட்டு உடல் சிலிர்த்திருக்கிறேன்!
எனக்கு திருவாசகமும், தேவாரமும் ராகத்துடன் கற்று கொள்ள வேண்டும் என்று ஆசை. இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி சீக்கிரம் கேட்க ஆவல்...
வியாழன், ஜூன் 09, 2005
வினயம்...
நான் ஐந்தாவது படிக்கும் போது, எதோ ஒரு பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வாங்கினேன். அப்போது எனக்கு தலை கால் புரியவில்லை. என்னமோ உலகத்திலேயே நான் தான் பெரிய orator-ன்ற நினைப்பில் ஒரு ரெண்டு நாள் சுத்தினேன். அது அறியா வயசு..:) ரெண்டு நாளைக்கப்பறம், ஒரு inter-school போட்டிக்கு போனேன். அன்னிக்கு தான் தெரிஞ்சுது நான் ஒண்ணுமே இல்லைனு. மதுரைக்கு போன புதுசுல, சென்னை-ல இருந்த எனக்கு அங்க எல்லாருமே வித்தியாசமா தெரிஞ்சாங்க. கொஞ்சம் கூட fashion sense இல்லை-னு மனசுக்குள்ள திட்டிக்கிட்டு இருந்தேன். பெரிய city-girl, எனக்கு தான் எல்லாம் தெரியும்-னு நினைச்சேன். ஆண்டவன் வெச்சான் ஒரு குட்டு! கொஞ்ச நாளில் தெரிஞ்சது, அங்க இருக்கறவங்க எவ்வளவு talented-னு! ஒரு மிக சாதாரணமான கிராமத்து பெண், கணிதத்தில் விட்டு கலக்கி எடுத்து விட்டாள். எனக்கு, இன்னிக்கு கூட, அவள் வேகத்துக்கு accurate-ஆக கணக்கு போட வராது. Calculus-ல் பலர் திணறிக் கொண்டிருக்க, அவள் மனக்கணக்காலேயே பல பாடங்களை போட்டுவிடுவாள்! அன்று வாயடைத்தவள் தான் நான். யாரையும் குறைவாக எடை போடக் கூடாது என்பதில், இளமையிலேயே நான் கற்று கொண்ட பாடம்.
Canada-வில் 11th படித்துக் கொண்டிருந்த நேரம். அங்கு சீனர்கள் ஜாஸ்தி. அப்போது Hong Kong சைனாவிடம் ஒப்படைக்க போகும் நேரம். அதனால் பலர் அங்கிருந்து immigrate ஆகி கனடா வந்தனர். சீனர்களுக்கு ஆங்கிலம் சரியாக வராது. அவர்கள் பேசுவதை புரிந்து கொள்ளவே பல மணி நேரம் ஆகும். எனக்கு மனதுக்குள் ஒரு ஏளனம். ஆங்கிலமே பேச தெரியாமல், இவர்கள் எல்லாம் என்ன செய்ய போகிறார்கள் என்று நினைத்தேன். நான் செய்த மிக பெரிய mistakes of judgement-ல் அதுவும் ஒன்று.
English-to-Chinese dictionary எடுத்துக் கொண்டு வருவார்கள் சீன மாணவர்கள். வகுப்பில், ஆசிரியர் பேசுவது அவர்களுக்கு மிக வேகமாக இருக்கும். புரியாது. அதனால், அதை காசெட்டில் record செய்து கொள்வார்கள். வீட்டில் சென்று, அதைக் கேட்டு, English-to-Chinese dictionary கொண்டு, வார்த்தைக்கு வார்த்தை translate செய்து, புரிந்து கொண்டு, பின்பு வீட்டு பாடம் செய்வார்கள்! அசந்து போனேன் நான். Hats off to their perseverance and patience.
மிக கூர்மையான மூளை கொண்டவர்கள். என் physics வகுப்பில், ஆங்கிலமே தெரியாத ஒரு சீனன் இருந்தான். அவன் பெயர் Lemus Chang. மிக அமைதியானவன். ஆங்கிலம் தெரியாததால் பேச மாட்டான் என நினைக்கிறேன். மிக கூச்ச சுபாவி. ஆனால் physics-ல் அவனிடம் பிச்சை வாங்க வேண்டும். எத்தனை கடினமான கணக்காக இருந்தாலும், எளிதில் elegant-ஆக முடித்து விடுவான். எங்கள் ஆசிரியரே அவனிடம் நிறைய பாடங்கள் கற்றுக் கொண்டார்! பின்னர் அவன் Governor General's Award for Outstanding Student வாங்கினான். University of British Columbia-வில் அவனுக்கு மிக உயர்ந்த நிதி உதவியுடன் அட்மிஷன் கிடைத்தது. ஆனாலும் மிக அடக்கமானவன். எனக்கு நிறைய நாட்கள் உதவியிருக்கிறான். மிக பொறுமையாக, ஆங்கிலம் தெரியாவிட்டாலும், எனக்கு பாடங்களை புரிய வைப்பான். மிக அருமையாக வயோலின் வாசிப்பான்! எங்கள் valediction-ல் அவனுக்கு நாங்கள் ஆடிட்டோரியத்தில் standing ovation குடுத்திருக்கிறோம்.
இந்த மாதிரி பலர், என்னை பல விதங்களில் அசத்தியிருக்கிறார்கள், often from least expected quarters. அப்போது கற்றுக் கொண்ட பாடம்: Never underestimate anyone. பல திறமைசாலிகளை சந்தித்திருக்கிறேன். சிலர் கலைகளில் சிறந்தவர்கள். சிலர் படிப்பில் சிறந்தவர்கள். சிலர் போன்ற தங்கமான குணம் பார்க்கவே முடியாது! ஆனால் என்னை அவர்களிடம் கவர்ந்தது, திறமை அல்ல. அவர்களுடைய அடக்கமும், வினயமும் தான். "நான் தான் பெரியவன்", "என்னை விட யாருமே இதை நன்றாக செய்ய முடியாது" என்று நினைப்பவர்கள் தான் இந்த உலகத்தில் நிறைய. "இவனிடம் போய் இத்தனை talent-ஆ" என்று சொல்வது என்னை பொறுத்த வரையில் ஒரு பெரிய அவமதிப்பு. ஒரு மனிதனிடம் இருக்க கூடாத ஒன்று இருந்துவிட்டது போல் கூறுகின்ற statement அது.
Canada-வில் 11th படித்துக் கொண்டிருந்த நேரம். அங்கு சீனர்கள் ஜாஸ்தி. அப்போது Hong Kong சைனாவிடம் ஒப்படைக்க போகும் நேரம். அதனால் பலர் அங்கிருந்து immigrate ஆகி கனடா வந்தனர். சீனர்களுக்கு ஆங்கிலம் சரியாக வராது. அவர்கள் பேசுவதை புரிந்து கொள்ளவே பல மணி நேரம் ஆகும். எனக்கு மனதுக்குள் ஒரு ஏளனம். ஆங்கிலமே பேச தெரியாமல், இவர்கள் எல்லாம் என்ன செய்ய போகிறார்கள் என்று நினைத்தேன். நான் செய்த மிக பெரிய mistakes of judgement-ல் அதுவும் ஒன்று.
English-to-Chinese dictionary எடுத்துக் கொண்டு வருவார்கள் சீன மாணவர்கள். வகுப்பில், ஆசிரியர் பேசுவது அவர்களுக்கு மிக வேகமாக இருக்கும். புரியாது. அதனால், அதை காசெட்டில் record செய்து கொள்வார்கள். வீட்டில் சென்று, அதைக் கேட்டு, English-to-Chinese dictionary கொண்டு, வார்த்தைக்கு வார்த்தை translate செய்து, புரிந்து கொண்டு, பின்பு வீட்டு பாடம் செய்வார்கள்! அசந்து போனேன் நான். Hats off to their perseverance and patience.
மிக கூர்மையான மூளை கொண்டவர்கள். என் physics வகுப்பில், ஆங்கிலமே தெரியாத ஒரு சீனன் இருந்தான். அவன் பெயர் Lemus Chang. மிக அமைதியானவன். ஆங்கிலம் தெரியாததால் பேச மாட்டான் என நினைக்கிறேன். மிக கூச்ச சுபாவி. ஆனால் physics-ல் அவனிடம் பிச்சை வாங்க வேண்டும். எத்தனை கடினமான கணக்காக இருந்தாலும், எளிதில் elegant-ஆக முடித்து விடுவான். எங்கள் ஆசிரியரே அவனிடம் நிறைய பாடங்கள் கற்றுக் கொண்டார்! பின்னர் அவன் Governor General's Award for Outstanding Student வாங்கினான். University of British Columbia-வில் அவனுக்கு மிக உயர்ந்த நிதி உதவியுடன் அட்மிஷன் கிடைத்தது. ஆனாலும் மிக அடக்கமானவன். எனக்கு நிறைய நாட்கள் உதவியிருக்கிறான். மிக பொறுமையாக, ஆங்கிலம் தெரியாவிட்டாலும், எனக்கு பாடங்களை புரிய வைப்பான். மிக அருமையாக வயோலின் வாசிப்பான்! எங்கள் valediction-ல் அவனுக்கு நாங்கள் ஆடிட்டோரியத்தில் standing ovation குடுத்திருக்கிறோம்.
இந்த மாதிரி பலர், என்னை பல விதங்களில் அசத்தியிருக்கிறார்கள், often from least expected quarters. அப்போது கற்றுக் கொண்ட பாடம்: Never underestimate anyone. பல திறமைசாலிகளை சந்தித்திருக்கிறேன். சிலர் கலைகளில் சிறந்தவர்கள். சிலர் படிப்பில் சிறந்தவர்கள். சிலர் போன்ற தங்கமான குணம் பார்க்கவே முடியாது! ஆனால் என்னை அவர்களிடம் கவர்ந்தது, திறமை அல்ல. அவர்களுடைய அடக்கமும், வினயமும் தான். "நான் தான் பெரியவன்", "என்னை விட யாருமே இதை நன்றாக செய்ய முடியாது" என்று நினைப்பவர்கள் தான் இந்த உலகத்தில் நிறைய. "இவனிடம் போய் இத்தனை talent-ஆ" என்று சொல்வது என்னை பொறுத்த வரையில் ஒரு பெரிய அவமதிப்பு. ஒரு மனிதனிடம் இருக்க கூடாத ஒன்று இருந்துவிட்டது போல் கூறுகின்ற statement அது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
