செவ்வாய், டிசம்பர் 20, 2005

காதல் கவிதை!

'ஐ லவ் யூ' விகடன் ஸ்பெஷலில் நடிகர் பரத் 'காதல் பத்து' என்று ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவர் எழுதிய காதல் கவிதை எனக்கு பிடித்திருந்தது:

உயரத்தில் இருப்பதால் நீ நிலாதான்!
ஆனால் உன்னையே நீ பார்க்க என்னிடம் தான் வர வேண்டும்!
ஏனெனில்,
காதல் நீர் நிறைந்த குளம் நான்!

நிலவும், தாமரை குளமும், அல்லி தண்டுகளை வைத்தும், பல ஆயிரம் காலங்களாக ஸ்ருங்கார ரசத்தில் கவிதை வரித்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அதையே புதிதான வகையில் புனைந்தால் இன்றும் ரசிக்கத்தான் செய்கிறோம். காதல் என்றும் இளமையானதன்றோ? :) 'அடடா, என்னால் இப்படி எழுத முடியவில்லையே' என்று ஆதங்கப்பட வைத்த கவிதை இது!

கருத்துகள் இல்லை: