ஞாயிறு, ஜூலை 10, 2005

கல்வி

இப்போது 'எல்லோருக்கும் கல்வி' என்ற கோஷம் அதிகமாக கேட்கிறது. எல்லோருக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்று அரசாங்கம் நிறைய சட்டங்கள் தீட்டுகிறது. ஏழை எளியவர்கள், கிராமத்திலிருந்து வரும் மாணவர்கள், போன்றோருக்கு படிப்பறிவு சென்றடைய வேண்டும் என்பது நோக்கம். சமீபத்தில் கூட, Common Entrance Test (CET) abolish செய்யப்பட்டது. இனிமேல் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் வைத்தே மாணவர்களுக்கு engineering கல்லூரிகளில் அனுமதி. CET-க்கு நிறைய பயிற்சி தேவையென்றும், இதில் நகர மாணாக்கர்களுக்கு ஒரு unfair advantage இருப்பதாகவும் அரசாங்கம் கருதி இந்த சட்டத்தை அமல் படுத்தியிருக்கிறார்கள். இந்த செயலுக்குப்பின் இருக்கும் எண்ணம் நல்லதுதான். ஆனால் implementation சரிதானா?

எல்லோருக்கும் கல்வி என்பது போற்ற வேண்டிய ஒரு விஷயம். ஆனால் என்ன கல்வி அவசியம்? எல்லோருக்கும் தொழில்நுட்பக் கல்வி அவசியம் தானா? அதை நோக்கியே சட்டங்கள் தீட்டுவது சரியா? கலை கல்லூரிய்¢ல் பயின்றால் மட்டம் என்கிற எண்ணம் மேலோங்கி இருக்கிற காலம் இது. எதற்கும் லாயக்கில்லாதவன் தான் கலைக் கல்லூரியில் சேறுவான் என்று மிக ஆழமாக மக்கள் மனதில் ஊறிவிட்டது. அதனால், ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ, engineering பயில்வதற்கான attitude, aptitude இருக்கிறதோ இல்லையோ, மாணவர்கள் சென்று அதில் விழுகிறார்கள். நமது பொருளாதாரமும் computer science சார்ந்த வேலைகளையே நிறைய உருவாக்குவதாலும், பலர் அதையே நாடுகின்றனர். இப்படி கட்டாயத்தால் சேர்ந்த மாணவர்கள், ஏதோ படிக்க வேண்டுமே என்று படிப்பதை நானே என் கண்கூட பார்த்திர்க்கிறேன். இதுதான் கல்வியா?

இப்படி அனைவரும் தொழில்நுட்ப கல்வி பயில வசதியாக, தரத்தை dilute செய்வது எந்த விதத்தில் நியாயம்? Knowledge is Power என்று கூறுவார்கள். அது முற்றிலும் உண்மை. அதைவிட ஆபத்தானது அறைகுறை அறிவு! Standards குறையக் குறைய, நிறைய பேர், "ஏன் நாமும் படித்தால் என்ன?" என்று சேர்ந்து கொண்டே தான் இருப்பார்கள். ஒரு வகையான கல்வி (அது தொழில்நுட்பம் மட்டுமல்ல, கலை, ஓவியம், சங்கீதம் எதுவாக இருந்தாலும் சரி) பயில வேண்டும் என்றால் அதற்கேற்ப முயற்சியும், பயிற்சியும் செய்யத்தான் வேண்டும். உழைக்காமல் வரும் எதுவும் பிரயோஜனப்படாது.

அந்த காலத்தில் குருகுலவாசம் இருந்தது. எவனோ ஒரு மனிதனுடன் இருந்து அவனுக்கு சேவை செய்வதால் எப்படி அறிவு வரும்? அது exploitation அல்லவா? என்றெல்லாம் பலர் கேட்கிறார்கள். குருவுக்கு சேவை செய்வதால், நேரிடைப் பயன் எதுவும் கிடையாது தான். ஆனால், discipline வளரும். வினயம் கற்றுக்கொள்ள முடியும். ஆசானிடம் ஒரு வித்தையை கற்று, அதை சரியான வழியில் மட்டுமே பயன்படுத்தும் மனப்பக்குவம் வரும். ஏனென்றால், அந்த வித்தையை கற்க அவன் பட்ட கஷ்டம் அந்த மாணவனுக்கு தெரியும். அதனுடைய அருமையும், பின் விளைவும் நன்றாகவே அறிவான். கஷ்டப்பட்டு நாம் சம்பாதித்த எதையும் அவ்வளவு சுலபமாக செலவழிக்க மாட்டோமல்லவா?

அந்த காலத்தில்,அந்த மனப்பக்குவம் வராத எவருக்கும் கல்வியளிக்க மாட்டார்கள். இந்நாளில், வலைதளத்தில் அனைத்துக்கும் recipe இருக்கிறது. தேங்காய் துவையல் செய்வதிலிருந்து அணு குண்டு செய்வது வரைக்கும் எல்லாமே க்ஷண நேரத்தில் நம் கையில்! இந்த instant education -ஆல் என்ன ஆகிறது? எங்கோ ஒரு மூலையில் இருக்கும் பள்ளி மாணவன், பொழுது போகாமல் எப்படி குண்டு செய்வது என்று பார்த்து, ஏதோ கோபத்தில் தனது சக மாணாக்கர்களையே கொன்று விடுகிறான்!! கோபம் கண நேரத்தில் வந்து மறையும். நிலையற்றது. அதனால் தான் கராட்டே பயில்பவர்க்கு, மனப்பயிற்சியும் கொடுப்பார்கள். இல்லாவிடில், அவர்கள் கையில் இருக்கும் சக்தி மற்றவரை அழிக்கவல்லது....

நான் கூற வருவது என்னவென்றால், நிறைய பேர் தொழில்நுட்பம் பய்¢ல ஆசைப்படுவது தவறல்ல. ஆனால் அதற்குண்டான aptitude, attitude, skills இருந்தால் மட்டுமே அதில் செல்ல வேண்டும். அந்த பட்டம் வாங்க உழைக்கவும் வேண்டும். மற்ற துறைகள் எல்லாம் மட்டம் என்று ஏன் நினைக்க வேண்டும்? Engineering படிப்பவன் எந்த விதத்தில் உயர்ந்தவன்? கலைக் கல்லூரியில் படிப்பவன் எந்த விதத்தில் தாழ்ந்தவன்? எல்லோரும் எஞ்சினியராகவோ, டாக்டராகவோ போய்விட்டால், மற்ற தொழில்கள் அழிந்து விடுமல்லவா?

கிராமத்தில் இருப்போருக்கு, CET பாஸ் செய்யும் வசதி செய்து கொடுப்பது நியாயம், விவேகம். அதை விட்டுவிட்டு, தற்காலிக பயன் தரும் காரியங்களை செய்வது ஒரு vision இல்லாமல் செய்யும் காரியம்.