ஞாயிறு, மார்ச் 27, 2005

மனதை கவர்ந்தது...

இந்த கவிதை ஒரு நண்பர் அனுப்பினார்...பிடித்திருந்தது...

சனி, மார்ச் 12, 2005

இனியவை....

இம்முறை திருவானைக்காவல் சென்ற போது, ஜம்புகேச்வரர் சன்னிதியில் உச்சிகால பூஜை நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒருவர் மிக அழகாக திருமுறை பாட ஆரம்பித்தார். என்னை கவர்ந்த, நான் முணுமுணுக்கும் பாடல்கள்....

"மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே."

"சொற்றுணை வேதியன் சோதிவானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக்
கைத்தொழ கற்றூணைப் பூட்டியோர்
கடலிற்ப் பாய்ச்சினும் நற்றுணையாவது
நமச்சிவாயவே."

அரங்கனை காண செல்லும் போது நான் விரும்பும் பாடல்:

"கொண்டல் வண்ணனைக்
கோவலனாய் வெண்ணை உண்ட வாயன்
என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோணியரங்கன்
என்னமுதினைக் கண்டகண்கள்
மற்றொன்றினைக் காணாவே."