வெள்ளி, டிசம்பர் 23, 2005

மறுபடியும் காவிரி...

செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும்
கஞ்ச வேட்கையில் காந்தமன் வேண்ட
அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை
செங்குணக் கொழுகிய சம்பாபதி அயல்
பொங்குநீர்ப் பரப்போடு பொருந்தித் தோன்ற

திருச்சி கொள்ளிடத்தில் தண்ணீர் இருந்து நான் பார்த்தேயில்லை. சங்ககால சோழர்கள் காலத்தில், காவிரி கரைபுரண்டு ஓடி நாட்டை அழித்துவிடுகிறது என்று தண்ணீருக்கு மாற்றுபாதையாக அமைக்கப்பெற்றதே கொள்ளிடம். காவிரி நீருக்கு 'கொள்ளும் இட' மாக அமைக்கப்பெற்ற செயற்கை நதி, திருச்சியில் பலகாலமாக வற்றிப்போய் ஒரு சிறிய வாய்க்காலாகவே ஓடிக்கொண்டிருந்தது. கடந்த 50-70 வருட காலத்தில், இப்படி கொள்ளிடம் கரைபுரண்டு ஓடியதைப் யாருமே பார்த்ததில்லையென என் நண்பரின் அன்னை நேற்றுக் கூறினார். திருவரங்கத்தில், இராஜகோபுரத்துக்கு சற்று தெற்கே ஓடும் திருமஞ்சன காவேரி, ரோட்டை தொட்டுக்கொண்டு ஓடுகிறதாம். இப்படி, காவிரி பேச்சு வந்த போது, என்றோ படித்த இந்த பாடல் ஞாபகம் வந்தது.

சூரிய வம்சத்தாரான சோழர் குலத்தில் தோன்றியவன் காந்தமன் என்ற அரசன். சோழ நாட்டில் ஜீவநதி எதுவுமில்லையே என்ற வருந்தினான். சஹ்யாத்ரி மலைமகளான காவிரியை சோழநாட்டுக்கு அழைத்து வருவதற்காக இறைவனிடம் வேண்டி வரம் பெற்றான். அப்படிப்பட்ட காவிரியை, அகத்திய முனிவர் காவிரிக்குமரி மீது பாசம் கொண்டு தன் கமண்டலுவில் அடைத்து வைத்தார். விநாயகர் காக்கை உருவத்தில் அந்த நதியை விடுதலை செய்ய, அவள் விரிந்து, பரந்து சோழ தேசத்தில் ஒய்யார நடைப் போட்டாள். அவள் ஓடிய இடத்திலெல்லாம், காந்தமன் எண்ணியபடியே, சோழ தேசம் வனப்புப் பெற்றது. காவிரி கடைசியில் காவிரிபூம்பட்டினத்தில் கடலுடன் கலக்கிறாள். அந்த காலத்தில், காவிரிபூம்பட்டினத்துக்கு, 'சம்பாபதி' என்று பெயர். இத்தகைய அழகிய பாடலை இயற்றியவர் யாரென எனக்கு தெரியவில்லை. காஞ்சி மஹாபெரியவரின் 'அருளுரை' யில் படித்ததாக நினைவு.

இப்போது கரைகொள்ளாமல் ஓடும் காவிரியை கூடிய சீக்கிரம் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்....:)

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

உன் ஆவல் காதலாக மாறிவிட ஆற்றுக்குள் குதித்து விடாதே , கண்ணே :). சிறிது நிதானமாக காவிரி அழகை கண்டு ரசிக்கவும்.

பாட்டு மிகவும் அழகு. அதை விளக்கும் கட்டுரை அருமை !

வாசு.

Gnana Kirukan சொன்னது…

Ungal Aval niraivera en valthukal Subha :)

TJ சொன்னது…

Subhashini,
Wish you a very happy and prosperous new year!!

Agnibarathi சொன்னது…

nadanththAy vAzi kAvEri. kAvEri en muthal kAthali. pala nAtkaL kaziththu thanggaL valaippathivukku varugai seithAlum, thanggaL thamizum thAnggaL pEsum thalaippugaLum puththuNarcci tharuginRana. Too bad I'm going to miss out on the thyAgarAja utsavam, especially when kAvEri is in full flow!! thanggaLathu tiruchi payaNa pugaippadanggaLai viraivil pathivu seyyavum. It would be brilliant to see kAvEri through the camera of someone who shares an equal love for her!! :)

பெயரில்லா சொன்னது…

Á¢¸ ¿ýÈ¡¸ þÕ츢ÈÐ ¯í¸û ¸ðΨà .