செவ்வாய், ஜூன் 28, 2005

அகிலாண்டேசுவரி (திருவானைக்காவல்-2)

வெகுவாக, பல சைவ §க்ஷத்ரங்களில், இறைவன் பெயரைச் சொல்லித்தான் கோவிலை அழைப்பார்கள். "நடராஜாவை பார்த்து விட்டு வரேன்", "கபாலீசுவரர் கோவில் போய்ட்டு வரேன்" என்று தான் பெரும்பாலும் கூறுவார்கள். மதுரையில் மட்டும் தான் "மீனாட்சி அம்மன் கோவில் போயிருந்தேன்" என்று கூறுவார்கள். திருவானைக்காவலிலும், ஜம்புகேசுவரருக்கு சமமான மரியாதை அம்பாள் அகிலாண்டேசுவரிக்கும். திருச்சியில் தடுக்கி விழுந்தால் ஒரு அகிலா-வை பார்க்கலாம்.

அம்பாள் மிக அழகு! அதுவும், அர்த்த ஜாம பூஜைக்கு அலங்கரிக்கப்பட்ட அகிலாண்டேசுவரியை பார்த்துக் கொண்டே இருக்கலாம்! அவ்வளவு களை, அழகு, கம்பீரம். அகிலாண்டேசுவரி மிக உக்ரமான அம்பாள் என்றே கூறுவார்கள். நடு இரவில், சலங்கை ஒலி 'ஜல் ஜல்' என ஒலிக்க, அவள் கோவில் பிரகாரங்களை வலம் வருவதாக ஐதீகம்; அப்போது அருகாமையில் இருக்கும் அக்ரஹாரத்து மக்கள் திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்தால், அம்பாள் உக்ரம் தாங்காமல் அப்படியே பொசுங்கி சாம்பலாக போய்விட்டதாகவும் இன்னமும் கூறுகின்றனர்!

இதை வைத்து, அம்பாள் கருணையில்லாதவளா என்று பலர் கேட்கலாம். கீதையில் அர்ஜூனனுக்கு விச்வரூப தரிசனம் கண்ணன் காண்பித்த போது, அது வரையில் அதை காணத் துடித்துக் கொண்டிருந்த பார்த்தன், அந்த ரூபத்தின் தேஜசும், உக்ரமும் காண சகிக்காமல், மறுபடியும் மனித உருவத்தை கொள்ள வேண்டி கண்ணனை மன்றாடவில்லையா? அதே போல் தான், அகிலாண்டேசுவரியின் உக்ரமும் அசக்தர்களான மனிதர்களை தாக்கியது. என்றுமே உண்மையைக் எதிர்கொள்ள தெம்பு ஜாஸ்தி வேண்டும். ஆதி சங்கரர், அப்பாவ்¢ ஜனங்களை காப்பதற்காக, அவள் உக்ரத்தை தணிக்க இறைவ்¢க்கு தாடகம் செய்து அணிவித்தார். இன்றும், அகிலாண்டேசுவரியின் அழகிய காதுகளில் அதைக் காணலாம். மேலும், அவளை குளிர்விக்க அவளது பெரிய பிள்ளையான வினாயகரை அவள் சந்நிதானத்துக்கு முன்பாக ப்ரதிஷ்டை செய்தார். தன் செல்லப் பிள்ளையை பார்த்துக் கொண்டே அவளும், சிரிப்புடன் பக்தர்களுக்கு, இன்றும் அருள் புரிகிறாள்.

புதன், ஜூன் 15, 2005

காவியங்களும் கற்பனையும்

மேற்கத்திய கலாசாரங்கள் நம் நாட்டை மட்டம் தட்டும் ஒரு விஷயம் என்னவென்றால் நமதுள்களும் நம்பும்படியாக இல்லாமல் மிக exaggerated-ஆக இருக்கின்றன. அதனால் நமது mythology வெறும் கட்டுக்கதை என்றும், நாம் மூட நம்பிக்கைக்காரர்கள், நமக்கு civilization தேவை என்றும் பல மேலைநாட்டவர்கள் முடிவு செய்து விடுகின்றனர். இந்த நினைப்பு தான்
ஆங்கிலேயர்களை 400 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்ய வைத்தது. அவர்கள் அப்படி நினைத்தது போதாது என்று, இந்தியர்களுக்கும் ஒரு inferiority complex கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர்! History is written by conquerors என்பது மிக உண்மை!

பொதுவாக, பல கடவுள்களை பூஜிக்கும் கலாசாரங்களை heathen civilizations என்று கூறுவர். அந்த கால யவனர்களும், ரோமர்களும் heathens என்று கூறப்படுவர். இங்கிலாந்தில், Angles, Saxons, Jutes என்ற tribes-ஆல் overrun ஆகும்முன், இருந்தவர்கள் 'celts'. இவர்களும்இயற்கையை கடவுளாக நினைத்தவர்கள். ஒரு Pantheon of Gods பூஜித்தவர்கள் தான் (ரோமில்இன்னமும் Pantheon என்ற மிக ·பேமஸ் சின்னம் இருக்கிறது). இவர்களுக்கும் `heathens என்று பட்டம் சூட்டி, புதிதாக வந்த படைகள் இவர்களை துரத்தி அடித்துவிட்டார்கள். இவர்கள் Wales மற்றும் Scotland மலை பகுதிகளில் சென்று ஒளிந்தனர். அவர்கள் கலாசாரம் அப்படியே mainstream- ல் assimilate ஆகிவிட்டது.

காலப் போக்கில் heathen என்கிற வார்த்தையே மிக derogatory ஆக மாறிவிட்டது. மிக சமீபத்தில் உருவான இரண்டு பெரிய மதங்கள், கிறித்துவமும், இஸ்லாமும் monotheistic மதங்கள். மிக வேகமாக பரவிய மதங்கள். அவ்வளவாக rituals-ல் பிடிப்பில்லாத மதங்கள். Due to a quirk of fate and history, இந்த இரண்டு மதத்தை சார்ந்த நாட்டவர்தான் பெரிய empires ஸ்தாபித்தார்கள். இவர்கள் கொள்கையை சாராதவர்கள், மற்ற புரியாத கலாசாரங்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள்,ஹீத்தன்ஸ் ஆகிவிட்டனர், நாம் உட்பட!

உண்மையில், கதைகளும், காவியங்களும் மிக ஆழமானவை. அந்த அந்த காலகட்டத்தில், அந்த அந்த மக்களுக்கும், சூழ்நிலைக்கும் ஏற்றாற்போல் உருவானவை தான் கலாசாரங்கள். ஆனால்எதையுமே நாம் literal-ஆக எடுத்து கொள்ள கூடாது, நம் கதைகள் உட்பட. நம் முன்னோர்கள், சில கருத்துக்களை எடுத்து சொல்வதற்காக, பல layers-ல் ஒரு விஷயத்தை சொல்வார்கள். படிக்கிறவன் எந்த லெவலில் இருந்தாலும், கதை அப்பீலிங்காக இருக்கும். மகாபாரதத்தில்திரொளபதிக்கு ஐந்து கணவர்கள். அதை literal-ஆக எடுத்து கொள்ளலாம். அல்லது பார்த்தல், கேட்டல், மொழிதல், ஸ்பரிச உணர்தல், நுகர்தல் ஆகிய ஐம்புலங்களும், மனசுக்கு அடங்கி, ஒற்றுமையாக செயல்பட்டால், வெற்றி என்றும் நம்மை பற்றியிருக்கும் என்று philosophical-ஆக எடுத்து கொள்ளலாம்.

அதே போல் தான் பிள்ளையார் சுவாமியும். மேலைநாட்டவர்கள், பிள்ளையார் படங்களை பார்த்து, "என்னடா, இவர்கள் ஏதோ நான்கு கையும், யானை மூஞ்சியும், மனித உடலுமாக எதையோ ஒரு mutant உருவத்தை போய் கடவுளாக வழிபடுகிறார்களே!" என்று நினைப்பார்கள். ஆனால் அதே mutants பற்றி X-men I, X-men II, Cat Woman, Batman என்றெல்லாம் இவர்களே படம் எடுத்தால்
அது மட்டும் எப்படியோ 'uncivilized' கிடையாது. அதை போய் பார்ப்பார்கள். அந்த characters எல்லாம் வேறு மிக ·பேவரிட்ஸாக போய்விடும்! பிள்ளையாரின் உடலமைப்புக்கு பல கதைகள் உண்டு. அவர் முகமும், தும்பிக்கையும் 'ஓம்' என்ற ப்ரணவ மந்திர தத்துவத்தை எடுத்து சொல்வதாக இருக்கும். அவர், ஞானத்துக்கு எல்லாம் ஆதாரமான பிரணவ மந்திரமே உருவான குழந்தை சுவாமி
என்பதைக் கூறத்தான் அந்த உடல்-முக வடிவம்!

உலகின் பல அதிசயங்களில், பண்டைய கிரேக்கர், ரோமர், எகிப்தர்களின் படைப்புகள் தான் இன்னமும் புகழ் பெற்றவை. அவர்கள் அவ்வளவு uncivilized என்றால் அவ்வளவு உயர்ந்த படைப்புகள் உருவாக்குதல் சாத்தியமோ?! Posterity will decide.

சனி, ஜூன் 11, 2005

ஆனைக்கா அண்ணல் (திருவானைக்காவல்-1)

திருச்சியிலிருந்து பெரம்பலூர் செல்கையில் ஒரு வேடிக்கையான சம்பவம். பேருந்து ஸ்ரீரங்கமும் திருவானைக்காவலும் தாண்டிதான் பெரம்பலூர் செல்லும். ஒரு வயோதிகர் என்னுடன் ஸ்ரீரங்கத்தில் ஏறினார். நெற்றியில் பளிச்சென்று ஸ்ரீசூர்ணம் (நாமம்) தரித்திருந்தார். காதில் கடுக்கன், குடுமி என்று மிக கம்பீரமாக இருந்தார். திருவானைக்காவலை பேருந்து கடந்தபோது ஜம்புகேசுவரர்-அகிலாண்டேசுவரி ஆலய கோபுரம் தென்பட்டது. உடனே "ரங்கா ரங்கா" என்று கன்னத்தில் போட்டுக்கொண்டு முகத்தை சுளித்து, வேறு பக்கம் திரும்பிவிட்டார்! அதாவது வீர வைஷ்ணவரான அவர் சிவன் கோவில் கோபுரத்தை பார்த்தால் கூட பாவமாம்! "ஹரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயில மண்ணு" என்று அறியாதவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்! வைணவர்கள் எல்லோரும் இப்படித்தான் என்று நான் சொல்லவில்லை. சைவர்கள் மிக tolerant என்றும் கூற வரவில்லை. Belief என்ற விஷயம் வருகிற போது, என்னதான் படித்திருந்தாலும், அனுபவஸ்தராயிருந்தாலும் மனிதர்கள் எப்படி மாறுகின்றனர்! ஆனால் எல்லா தெய்வமும் ஒரே பரம்பொருள் தான் என்று அறியாத வாழ்வும், படிப்பும் எதற்கு பிரயோஜனம்?! இது சிவ-விஷ்ணு அபேதத்துக்க்கு மட்டும் கூறவில்லை. ஜீஸஸ், அல்லா அனைத்து தெய்வங்களுக்கும், மதத்தினருக்கும் common.

திருவானைக்காவல் ஸ்ரீரங்கத்துக்கு 1 கி.மி தூரத்தில் உள்ளது. ஸ்ரீரங்கத்தின் காந்தி ரோடு வழியாக சென்றால் நேரே திருவானைக்காவல் சென்று விடலாம். இவ்வளவு அருகாமையில் இருந்தாலும், கோவில் styles, சுற்று சூழல், வழிபாட்டு கலாசாரம் எல்லாமே மிக வித்தியாசம்! ஸ்ரீரங்கத்தில் துளசி வாசனை தூக்கும் என்றால், திருவானைக்கா நுழையும் போதே, ரோஜா புஷ்பமாலை வாசனையும், பன்னீர் மணமும், கற்பூற வாசனையும், சுத்தமான திருநீர் மணமும் ஆளை தூக்கியடிக்கும். உள்ளே நுழையும் போதே "சிவ சிவ" மந்திரம் வரவேற்கும். கோவிலே அமைதியாக, ரம்மியமாக இருக்கும். ஸ்ரீரங்கத்தின் கூட்டத்தில் கால்வாசி கூட இருக்காது. இறைவனை நிம்மதியாக தரிசிக்கலாம்.

மிக பிரம்மாண்டமான கோவில். அகன்ற, சிற்பம் நிறைந்த மண்டபங்களும், விசலாமான பிரகாரங்களுமாக பக்தர்களை ஜம்புகேசுவரர் வரவேற்பார். ஒரு முறை வேதங்களை இறைவன், பார்வதிக்கு விளக்க ஆரம்பித்தார். பல யுகங்கள் ஆகியும், இறைவன் தன் பாட்டுக்கு, வேத சாரத்தை கூறிக் கொண்டே போக, தேவி கண்ணயர்ந்து விட்டாளாம். அதை கண்டு சினம் கொண்ட சிவ பெருமான், பார்வதியை சபித்து பூமிக்கு அனுப்பிவிட்டார். காவிரி கரைகளில் தான் ஞானம் வளரும் என்று நினைத்த பார்வதியன்னை, திருச்சியில் வந்து கடுந்தவம் செய்தாள். இறைவனும் ஞான ஸ்வரூபியான அம்பாளை மன்னித்து தன்னுடன் சேர்த்து கொண்டார். நீராலேயே லிங்கம் செய்து இறைவனை வழிபட்டதால், அது அப்பு லிங்கம் என்று அழைக்கப்படும். வைணவத்தில் எப்படி 108 திவ்யதேசங்களோ, அப்படி சைவத்தில் பஞ்சபூத தலங்கள். அதில் திருவானைக்கா அப்பு (water) ஸ்தலம்.

ஜம்புகேசுவரர் கர்ப்பக்ரஹத்துக்குள், அடியில் காவிரி ஓடிக்கொண்டிருப்பாள். எப்பொழுதும் நீரிலேயே நனைந்து கொண்டிருப்பார் ஜம்புகேசுவரர். ஜம்புகேசுவரரை 9 ஜன்னல்கள் வழியாக பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால் 9 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைப்பதாக ஐதீகம். நாகலிங்க மலர் வாசமும், வில்வமும், மல்லிகை மணமும் சூழும் அழகான சந்நிதானம்...சாயங்கால வேளைகளில், சிலர் வந்து தேவாரமும், திருவாசகமும், திருப்புகழும் அருமையாக ராகத்துடன் பாடிக்கொண்டிருப்பார்கள்.

"தோடுடைய செவியன் விடமுண்ட கண்டன்
மாசில் நல் வீணை தடவி..."

பாடலை ஒருவர் பாடிக்கேட்டு உடல் சிலிர்த்திருக்கிறேன்!

எனக்கு திருவாசகமும், தேவாரமும் ராகத்துடன் கற்று கொள்ள வேண்டும் என்று ஆசை. இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி சீக்கிரம் கேட்க ஆவல்...

வியாழன், ஜூன் 09, 2005

வினயம்...

நான் ஐந்தாவது படிக்கும் போது, எதோ ஒரு பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வாங்கினேன். அப்போது எனக்கு தலை கால் புரியவில்லை. என்னமோ உலகத்திலேயே நான் தான் பெரிய orator-ன்ற நினைப்பில் ஒரு ரெண்டு நாள் சுத்தினேன். அது அறியா வயசு..:) ரெண்டு நாளைக்கப்பறம், ஒரு inter-school போட்டிக்கு போனேன். அன்னிக்கு தான் தெரிஞ்சுது நான் ஒண்ணுமே இல்லைனு. மதுரைக்கு போன புதுசுல, சென்னை-ல இருந்த எனக்கு அங்க எல்லாருமே வித்தியாசமா தெரிஞ்சாங்க. கொஞ்சம் கூட fashion sense இல்லை-னு மனசுக்குள்ள திட்டிக்கிட்டு இருந்தேன். பெரிய city-girl, எனக்கு தான் எல்லாம் தெரியும்-னு நினைச்சேன். ஆண்டவன் வெச்சான் ஒரு குட்டு! கொஞ்ச நாளில் தெரிஞ்சது, அங்க இருக்கறவங்க எவ்வளவு talented-னு! ஒரு மிக சாதாரணமான கிராமத்து பெண், கணிதத்தில் விட்டு கலக்கி எடுத்து விட்டாள். எனக்கு, இன்னிக்கு கூட, அவள் வேகத்துக்கு accurate-ஆக கணக்கு போட வராது. Calculus-ல் பலர் திணறிக் கொண்டிருக்க, அவள் மனக்கணக்காலேயே பல பாடங்களை போட்டுவிடுவாள்! அன்று வாயடைத்தவள் தான் நான். யாரையும் குறைவாக எடை போடக் கூடாது என்பதில், இளமையிலேயே நான் கற்று கொண்ட பாடம்.

Canada-வில் 11th படித்துக் கொண்டிருந்த நேரம். அங்கு சீனர்கள் ஜாஸ்தி. அப்போது Hong Kong சைனாவிடம் ஒப்படைக்க போகும் நேரம். அதனால் பலர் அங்கிருந்து immigrate ஆகி கனடா வந்தனர். சீனர்களுக்கு ஆங்கிலம் சரியாக வராது. அவர்கள் பேசுவதை புரிந்து கொள்ளவே பல மணி நேரம் ஆகும். எனக்கு மனதுக்குள் ஒரு ஏளனம். ஆங்கிலமே பேச தெரியாமல், இவர்கள் எல்லாம் என்ன செய்ய போகிறார்கள் என்று நினைத்தேன். நான் செய்த மிக பெரிய mistakes of judgement-ல் அதுவும் ஒன்று.

English-to-Chinese dictionary எடுத்துக் கொண்டு வருவார்கள் சீன மாணவர்கள். வகுப்பில், ஆசிரியர் பேசுவது அவர்களுக்கு மிக வேகமாக இருக்கும். புரியாது. அதனால், அதை காசெட்டில் record செய்து கொள்வார்கள். வீட்டில் சென்று, அதைக் கேட்டு, English-to-Chinese dictionary கொண்டு, வார்த்தைக்கு வார்த்தை translate செய்து, புரிந்து கொண்டு, பின்பு வீட்டு பாடம் செய்வார்கள்! அசந்து போனேன் நான். Hats off to their perseverance and patience.

மிக கூர்மையான மூளை கொண்டவர்கள். என் physics வகுப்பில், ஆங்கிலமே தெரியாத ஒரு சீனன் இருந்தான். அவன் பெயர் Lemus Chang. மிக அமைதியானவன். ஆங்கிலம் தெரியாததால் பேச மாட்டான் என நினைக்கிறேன். மிக கூச்ச சுபாவி. ஆனால் physics-ல் அவனிடம் பிச்சை வாங்க வேண்டும். எத்தனை கடினமான கணக்காக இருந்தாலும், எளிதில் elegant-ஆக முடித்து விடுவான். எங்கள் ஆசிரியரே அவனிடம் நிறைய பாடங்கள் கற்றுக் கொண்டார்! பின்னர் அவன் Governor General's Award for Outstanding Student வாங்கினான். University of British Columbia-வில் அவனுக்கு மிக உயர்ந்த நிதி உதவியுடன் அட்மிஷன் கிடைத்தது. ஆனாலும் மிக அடக்கமானவன். எனக்கு நிறைய நாட்கள் உதவியிருக்கிறான். மிக பொறுமையாக, ஆங்கிலம் தெரியாவிட்டாலும், எனக்கு பாடங்களை புரிய வைப்பான். மிக அருமையாக வயோலின் வாசிப்பான்! எங்கள் valediction-ல் அவனுக்கு நாங்கள் ஆடிட்டோரியத்தில் standing ovation குடுத்திருக்கிறோம்.

இந்த மாதிரி பலர், என்னை பல விதங்களில் அசத்தியிருக்கிறார்கள், often from least expected quarters. அப்போது கற்றுக் கொண்ட பாடம்: Never underestimate anyone. பல திறமைசாலிகளை சந்தித்திருக்கிறேன். சிலர் கலைகளில் சிறந்தவர்கள். சிலர் படிப்பில் சிறந்தவர்கள். சிலர் போன்ற தங்கமான குணம் பார்க்கவே முடியாது! ஆனால் என்னை அவர்களிடம் கவர்ந்தது, திறமை அல்ல. அவர்களுடைய அடக்கமும், வினயமும் தான். "நான் தான் பெரியவன்", "என்னை விட யாருமே இதை நன்றாக செய்ய முடியாது" என்று நினைப்பவர்கள் தான் இந்த உலகத்தில் நிறைய. "இவனிடம் போய் இத்தனை talent-ஆ" என்று சொல்வது என்னை பொறுத்த வரையில் ஒரு பெரிய அவமதிப்பு. ஒரு மனிதனிடம் இருக்க கூடாத ஒன்று இருந்துவிட்டது போல் கூறுகின்ற statement அது.