வியாழன், பிப்ரவரி 10, 2005

அரிது அரிது தமிழ் தெரிவது அரிது.....

உலகத்தில் நிறைய பேர் ஒரு விஷயம் தனக்கு தெரியும் என்று தான் ஜம்பமடித்து கொள்வார்கள். ஆனால் நம் தமிழர்கள் என்னவென்றால் தனக்கு தமிழ் தெரியாது (P.S. ஆனால் ஆங்கிலம் தெரியும்!!) என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறார்கள்!
உலகில் பல பேருக்கு பல விஷயங்கள் பிடிக்கும் பிடிக்காமல் இருக்கும். சிலருக்கு சில ஊர்கள் பிடிக்கும். சில ஊர்கள் பிடிக்காது. சில நிறங்கள் பிடிக்கலாம். சிலது பிடிக்காமல் போகலாம். ஆனால் தன் தாய்மொழி என்று பேசுவதற்கு வெட்கும் அளவுக்கு தமிழ் என்ன பாவம் செய்ததோ?! எல்லா நாட்டினரும் தன் சொந்த பாஷையை தான் கொண்டாடி கொள்வார்கள். ஆங்கிலம் தெரிந்தும் பலர் பேச மறுக்கின்றனர். ஆனால் தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்து தமிழ் பேச, எழுத தெரியாது என்று சொல்பவர்களுக்கு excuses கிடையாது.
பல பேர்கள் என்னை எங்காவது பார்க்கும் போது, "தமிழ் எழுத கூட தெரியுமோ!" என்று கேட்கிறார்கள். அந்த அளவுக்கு தமிழ் எழுத தெரியும் என்பது அரிதாகிவிட்டது.
இதில் comedy என்னவென்றால், பல பேருக்கு தமிழ் தெரியும் என்று சொன்னால், ஆங்கிலம் தெரியாது என்று நினைப்பார்களோ என்று ஒரு complex. Knowing one language doesn't preclude being fluent in another. இதை மக்கள் எப்போது புரிந்து கொள்வார்களோ தெரியவில்லை.

திங்கள், பிப்ரவரி 07, 2005

பிள்ளையார் சுழி

தமிழ் பண்பாட்டின் படி குழந்தை சுவாமியை வேண்டிக்கொண்டு இந்த பதிப்புக்கு ஒரு பிள்ளையார் சுழி போடுகிறேன்.